சீனாவின் கனவுத் திட்டம்: வெளியேறும் இத்தாலி!
Jul 26, 2025, 06:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவின் கனவுத் திட்டம்: வெளியேறும் இத்தாலி!

பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி திட்டத்தில் இருந்து விலக முடிவு!

Web Desk by Web Desk
Sep 11, 2023, 11:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீன அதிபரின் கனவுத் திட்டமான “பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி” திட்டத்தில் இருந்து வெளியேற இத்தாலி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக டெல்லியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் சீன பிரதமரிடம் இத்தாலி பிரதமர் தனிப்பட்ட முறையில் கூறியதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

சீனாவின் கனவுத் திட்டமான “பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி” திட்டத்தில் இணையும் ஒப்பந்தத்தில் 2019-ம் ஆண்டு இத்தாலி அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டது. ஆனால், அத்திட்டம் அந்நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க சிறிதும் உதவி செய்யவில்லை என்று இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் கைடோ க்ரோசெட்டோ கடந்த ஜூலை மாதம் கூறியிருந்தார்.

எனவே, கடந்த செப்டம்பர் 5-ம் தேதி பெய்ஜிங்கிற்குச் சென்ற இத்தாலிய வெளியுறவுத்துறை அமைச்சர் அன்டோனியோ தஜானி, பெல்ட் ரோடு பற்றி விமர்சன ரீதியாக பேசியதாகச் செய்திகள் தெரிவித்தன. மேலும், பெல்ட் ரோடு “எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை” என்றும் இத்தாலி தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டின் இடையே, சீன பிரதமர் லி கெகியாங்கை, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி சந்தித்துப் பேசினார். அப்போது, பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சித் திட்டத்தில் இருந்து விலக இத்தாலி முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்ததாகவும், அதேசமயம், சீனாவுடன் நட்புறவை தொடர விரும்புவதாகவும், விரைவில் சீனாவிற்கு வரவிருப்பதாகவும் மெலோனி கூறியதாக அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருக்கிறார்.

சீனாவின் பெல்ட் ரோடு திட்டத்தில் இத்தாலி இணைந்ததால், அமெரிக்காவுடனான உறவில் பிரச்னை ஏற்பட்டதாகவும், இதை சரி செய்யவே, அத்திட்டத்தில் இருந்து விலக இத்தாலி முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னரும், பெல்ட் அண்ட் ரோடு முன்மாதிரி திட்டத்தில் இருந்து இத்தாலி விலக முன்வந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த மாதம் பெய்ஜிங்கில் சீனா 3-வது பெல்ட் ரோடு மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இத்தாலியின் இந்த முடிவு வெளியாகி சீனாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. எனினும், இது பற்றி இத்தாலி அரசு இறுதி முடிவெடுக்க வரும் டிசம்பர் மாதம் வரை அவகாசம் இருப்பதாகவும் மெலோனி கூறியிருக்கிறார்.

Tags: Exit planItalychinabelt and road initiative
ShareTweetSendShare
Previous Post

செப்டம்பர் 11 : விவேகானந்தர் சிகாகோவில் உரை நிகழ்த்திய நாள் !

Next Post

பா.ஜ.க.வுடன் கூட்டணி குறித்து பேசியது உண்மை: தேவகௌடா ஒப்புதல்!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Load More

அண்மைச் செய்திகள்

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies