சீனாவின் கனவுத் திட்டம்: வெளியேறும் இத்தாலி!
Oct 26, 2025, 02:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவின் கனவுத் திட்டம்: வெளியேறும் இத்தாலி!

பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி திட்டத்தில் இருந்து விலக முடிவு!

Web Desk by Web Desk
Sep 11, 2023, 11:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீன அதிபரின் கனவுத் திட்டமான “பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி” திட்டத்தில் இருந்து வெளியேற இத்தாலி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக டெல்லியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் சீன பிரதமரிடம் இத்தாலி பிரதமர் தனிப்பட்ட முறையில் கூறியதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

சீனாவின் கனவுத் திட்டமான “பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி” திட்டத்தில் இணையும் ஒப்பந்தத்தில் 2019-ம் ஆண்டு இத்தாலி அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டது. ஆனால், அத்திட்டம் அந்நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க சிறிதும் உதவி செய்யவில்லை என்று இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் கைடோ க்ரோசெட்டோ கடந்த ஜூலை மாதம் கூறியிருந்தார்.

எனவே, கடந்த செப்டம்பர் 5-ம் தேதி பெய்ஜிங்கிற்குச் சென்ற இத்தாலிய வெளியுறவுத்துறை அமைச்சர் அன்டோனியோ தஜானி, பெல்ட் ரோடு பற்றி விமர்சன ரீதியாக பேசியதாகச் செய்திகள் தெரிவித்தன. மேலும், பெல்ட் ரோடு “எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை” என்றும் இத்தாலி தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டின் இடையே, சீன பிரதமர் லி கெகியாங்கை, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி சந்தித்துப் பேசினார். அப்போது, பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சித் திட்டத்தில் இருந்து விலக இத்தாலி முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்ததாகவும், அதேசமயம், சீனாவுடன் நட்புறவை தொடர விரும்புவதாகவும், விரைவில் சீனாவிற்கு வரவிருப்பதாகவும் மெலோனி கூறியதாக அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருக்கிறார்.

சீனாவின் பெல்ட் ரோடு திட்டத்தில் இத்தாலி இணைந்ததால், அமெரிக்காவுடனான உறவில் பிரச்னை ஏற்பட்டதாகவும், இதை சரி செய்யவே, அத்திட்டத்தில் இருந்து விலக இத்தாலி முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னரும், பெல்ட் அண்ட் ரோடு முன்மாதிரி திட்டத்தில் இருந்து இத்தாலி விலக முன்வந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த மாதம் பெய்ஜிங்கில் சீனா 3-வது பெல்ட் ரோடு மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இத்தாலியின் இந்த முடிவு வெளியாகி சீனாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. எனினும், இது பற்றி இத்தாலி அரசு இறுதி முடிவெடுக்க வரும் டிசம்பர் மாதம் வரை அவகாசம் இருப்பதாகவும் மெலோனி கூறியிருக்கிறார்.

Tags: Italychinabelt and road initiativeExit plan
ShareTweetSendShare
Previous Post

செப்டம்பர் 11 : விவேகானந்தர் சிகாகோவில் உரை நிகழ்த்திய நாள் !

Next Post

பா.ஜ.க.வுடன் கூட்டணி குறித்து பேசியது உண்மை: தேவகௌடா ஒப்புதல்!

Related News

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

முழுநேர சினிமா விமர்சகராக முதல்வர் மாறிவிட்டார் – இபிஎஸ் விமர்சனம்!

இந்தியாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

நீலகிரி குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை, கரடி!

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

TVS புதிய M1-S எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் வெளியிட உள்ளது!

தாய்லாந்தின் ராஜமாதா சிரிகிட் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு!

கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் – குடும்பத்துடன் சூரிய உதயத்தை கண்டு மகிழ்ச்சி!

மெக்சிகோ : வெள்ளத்தால் ஏற்பட்ட சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய எலி மீட்பு!

பாக். அணு ஆயுதங்கள் அமெரிக்கா கட்டுப்பாட்டில் இருந்தது – முன்னாள் சிஐஏ அதிகாரி

பாகிஸ்தானின் கடன் சுமை ரூ.25 லட்சம் கோடியாக உயர்வு!

தாம்பரம் அருகே அர்ச்சகரின் மோதிரத்தை பழுது பார்ப்பது போல் திருடிய நபர் கைது!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

புதினுடன் பேசி என் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை – டிரம்ப்

கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மீது அமெரிக்கா பொருளாதார தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies