பண்டிகைகளை நம்பி இருக்கும் மக்களின் பொருளாதாரத்தை சிதைக்கிறது திமுக- அண்ணாமலை குற்றச்சாட்டு!
Jul 27, 2025, 09:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பண்டிகைகளை நம்பி இருக்கும் மக்களின் பொருளாதாரத்தை சிதைக்கிறது திமுக- அண்ணாமலை குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Sep 12, 2023, 09:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பண்டிகைகளை நம்பி இருக்கும் மக்களின் பொருளாதாரத்தை சிதைக்கும் ஊழல் திமுக என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகம் முழுவதும், விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளிகள் மீதும், பக்தர்கள் மீதும் காவல்துறை மூலம் திமுக அரசு அடக்குமுறைகளைக் கையாண்டு கொண்டிருப்பதாக அறிகிறேன். பண்டிகைக் கொண்டாட்டங்கள் என்பது சுழற்சிப் பொருளாதாரம் ஆகும். மதப் பாகுபாடின்றி, சமூகத்தில் ஒவ்வொருவரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பண்டிகைகள் மூலம் பலனடைவார்கள்.

பண்டிகைகள் மூலம் நடைபெறும் வணிகம் எளிய மக்கள் பலருக்கும் வாழ்வாதாரத்தின் அடிப்படையாகும். பெரும்பாலான மக்கள் கொண்டாடும் பண்டிகைக் கொண்டாட்டங்களைத் தடை செய்ய முயற்சிப்பதால் பெரிதும் பாதிக்கப்படுவது, அடித்தட்டு மக்களே. எல்லாம் தெரிந்தவர்கள் போல காட்டிக் கொள்ளும் திமுகவினருக்கு, இந்த அடிப்படை கூடத் தெரியாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

திமுக அல்ல, திக அதற்கு முன்பிருந்த அவர்களின் தாய்க்கட்சியான நீதிக் கட்சி உருவாக்கப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தனை ஆண்டுகளாக இல்லாத கட்டுப்பாடுகள், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மட்டும் திடீரென ஏற்படுத்தப்படுவது, திமுகவுக்கு கட்சிக்கும் ஆட்சிக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

ஒட்டு மொத்த தமிழக மக்களின் நம்பிக்கைக்கும் மதிப்பு கொடுக்க வேண்டிய தமிழக அரசு, யாரோ ஒன்றிரண்டு பேரைத் திருப்தி செய்ய மட்டும் பயன்படுத்தப்படுகிறது. திமுக எனும் கட்சியின் காலாவதியான கொள்கைகளை, பொதுவாகச் செயல்பட வேண்டிய தமிழக அரசின் மீது திணிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

எந்த மதப் பண்டிகையாக இருந்தாலும், தமிழகத்தில் கொண்டாட்டங்களுக்குக் குறைவிருந்ததில்லை. சமூகத்தில், அனைத்து மக்களும், ஜாதி மதப் பாகுபாடின்றி பண்டிகைக் காலங்களில் பயன்பெறுகிறார்கள். பொருளாதார ரீதியாக, எளிய மக்களுக்கான வாழ்வாதாரம், பண்டிகைக் காலங்களையே பெரிதளவில் சார்ந்திருக்கிறது.

இந்த நிலையில், சமூகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் இந்து மதம் சார்ந்த பண்டிகைகளைத் தேவையில்லாத கட்டுப்பாடுகள் கொண்டு வந்து முடக்க முயற்சிப்பது, பொருளாதாரரீதியாக அனைவரையுமே பாதிக்கும்.

அனைவரும் சகோதரர்களாக வாழ்ந்து கொண்டிருக்கையில், இந்து மதப் பண்டிகைகளைக் கட்டுப்படுத்தினால், மற்ற மத மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்ற திமுகவின் தீய எண்ணம் எதிர்வினைகளையே ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடக் கூடாது. பொதுமக்கள் அனைவருக்குமே திமுக செய்யும் துரோகம் இது.

வருடம் ஒரு முறை சில வாரங்கள் நடைபெறும் விநாயகர் சிலை செய்யும் தொழிலைத் தடுப்பது, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களையே தடுக்க நினைக்கும் முயற்சியாகத்தான் தெரிகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் இந்த அராஜகப் போக்கை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது.

உடனடியாக, தமிழக அரசும், காவல்துறையும், எளிய தொழிலாளர்கள் மீதான இது போன்ற அடக்குமுறைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். பண்டிகைக் காலத்தில் ஒட்டு மொத்த சமூகத்தின் வாழ்வாதாரமும், பண்டிகைக் கொண்டாட்டங்களும் இதனால் பாதிக்கப்படுவதை காவல்துறை உணர வேண்டும்.

சோதனை என்ற பெயரில் சிலை செய்யும் தொழிலாளர்களைத் துன்புறுத்துவதையும், வழக்குப் பதிவு செய்வோம் என்று மிரட்டுவதையும் காவல்துறை நிறுத்திக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதனை ஆட்சியாளர்கள் உணர்ந்திருப்பது அனைவருக்குமே நல்லது, எனத் தெரிவித்துள்ளார்.

 

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றது !

Next Post

பதவி விலகு சேகர் பாபு: தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பாஜகவினர் கைது

Related News

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies