பண்டிகைகளை நம்பி இருக்கும் மக்களின் பொருளாதாரத்தை சிதைக்கிறது திமுக- அண்ணாமலை குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 06:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பண்டிகைகளை நம்பி இருக்கும் மக்களின் பொருளாதாரத்தை சிதைக்கிறது திமுக- அண்ணாமலை குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Sep 12, 2023, 09:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பண்டிகைகளை நம்பி இருக்கும் மக்களின் பொருளாதாரத்தை சிதைக்கும் ஊழல் திமுக என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகம் முழுவதும், விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளிகள் மீதும், பக்தர்கள் மீதும் காவல்துறை மூலம் திமுக அரசு அடக்குமுறைகளைக் கையாண்டு கொண்டிருப்பதாக அறிகிறேன். பண்டிகைக் கொண்டாட்டங்கள் என்பது சுழற்சிப் பொருளாதாரம் ஆகும். மதப் பாகுபாடின்றி, சமூகத்தில் ஒவ்வொருவரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பண்டிகைகள் மூலம் பலனடைவார்கள்.

பண்டிகைகள் மூலம் நடைபெறும் வணிகம் எளிய மக்கள் பலருக்கும் வாழ்வாதாரத்தின் அடிப்படையாகும். பெரும்பாலான மக்கள் கொண்டாடும் பண்டிகைக் கொண்டாட்டங்களைத் தடை செய்ய முயற்சிப்பதால் பெரிதும் பாதிக்கப்படுவது, அடித்தட்டு மக்களே. எல்லாம் தெரிந்தவர்கள் போல காட்டிக் கொள்ளும் திமுகவினருக்கு, இந்த அடிப்படை கூடத் தெரியாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

திமுக அல்ல, திக அதற்கு முன்பிருந்த அவர்களின் தாய்க்கட்சியான நீதிக் கட்சி உருவாக்கப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தனை ஆண்டுகளாக இல்லாத கட்டுப்பாடுகள், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மட்டும் திடீரென ஏற்படுத்தப்படுவது, திமுகவுக்கு கட்சிக்கும் ஆட்சிக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

ஒட்டு மொத்த தமிழக மக்களின் நம்பிக்கைக்கும் மதிப்பு கொடுக்க வேண்டிய தமிழக அரசு, யாரோ ஒன்றிரண்டு பேரைத் திருப்தி செய்ய மட்டும் பயன்படுத்தப்படுகிறது. திமுக எனும் கட்சியின் காலாவதியான கொள்கைகளை, பொதுவாகச் செயல்பட வேண்டிய தமிழக அரசின் மீது திணிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

எந்த மதப் பண்டிகையாக இருந்தாலும், தமிழகத்தில் கொண்டாட்டங்களுக்குக் குறைவிருந்ததில்லை. சமூகத்தில், அனைத்து மக்களும், ஜாதி மதப் பாகுபாடின்றி பண்டிகைக் காலங்களில் பயன்பெறுகிறார்கள். பொருளாதார ரீதியாக, எளிய மக்களுக்கான வாழ்வாதாரம், பண்டிகைக் காலங்களையே பெரிதளவில் சார்ந்திருக்கிறது.

இந்த நிலையில், சமூகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் இந்து மதம் சார்ந்த பண்டிகைகளைத் தேவையில்லாத கட்டுப்பாடுகள் கொண்டு வந்து முடக்க முயற்சிப்பது, பொருளாதாரரீதியாக அனைவரையுமே பாதிக்கும்.

அனைவரும் சகோதரர்களாக வாழ்ந்து கொண்டிருக்கையில், இந்து மதப் பண்டிகைகளைக் கட்டுப்படுத்தினால், மற்ற மத மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்ற திமுகவின் தீய எண்ணம் எதிர்வினைகளையே ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடக் கூடாது. பொதுமக்கள் அனைவருக்குமே திமுக செய்யும் துரோகம் இது.

வருடம் ஒரு முறை சில வாரங்கள் நடைபெறும் விநாயகர் சிலை செய்யும் தொழிலைத் தடுப்பது, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களையே தடுக்க நினைக்கும் முயற்சியாகத்தான் தெரிகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் இந்த அராஜகப் போக்கை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது.

உடனடியாக, தமிழக அரசும், காவல்துறையும், எளிய தொழிலாளர்கள் மீதான இது போன்ற அடக்குமுறைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். பண்டிகைக் காலத்தில் ஒட்டு மொத்த சமூகத்தின் வாழ்வாதாரமும், பண்டிகைக் கொண்டாட்டங்களும் இதனால் பாதிக்கப்படுவதை காவல்துறை உணர வேண்டும்.

சோதனை என்ற பெயரில் சிலை செய்யும் தொழிலாளர்களைத் துன்புறுத்துவதையும், வழக்குப் பதிவு செய்வோம் என்று மிரட்டுவதையும் காவல்துறை நிறுத்திக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதனை ஆட்சியாளர்கள் உணர்ந்திருப்பது அனைவருக்குமே நல்லது, எனத் தெரிவித்துள்ளார்.

 

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றது !

Next Post

பதவி விலகு சேகர் பாபு: தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பாஜகவினர் கைது

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies