திமுக அரசு ஊட்டி டீ-யை புறக்கணிக்கிறது!
Aug 25, 2025, 09:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசு ஊட்டி டீ-யை புறக்கணிக்கிறது!

Web Desk by Web Desk
Sep 12, 2023, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊட்டி டீ-க்காக 100 சதவீதம் டீ தூளையும், நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டுமே பெற வேண்டும் என்ற விதியை திமுக அரசு புறக்கணித்து வருவதாக, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பனருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஊட்டி டீ’க்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டுமே டீ துள் கொள்முதல் செய்ய வேண்டும் ரேஷன் கடைகளில் ‘ஊட்டி டீ’ தூள் விற்பனையை அதிகரிக்க வேண்டும் பசுந் தேயிலைக்கு குறைந்தபட்ச விற்பனை விலையாக கிலோவுக்கு ரூ. 33.44 நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள், கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் கோவை வந்த மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயலை ‘நீலகிரி நாக்குபெட்டா படுகர் நலச் சங்க’ பிரதிநிதிகள் நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தினர். பசுந் தேயிலைக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த மத்திய அமைச்சர், இது குறித்து ‘இந்திய தேயிலை வாரியத்’திடம் விளக்கம் கேட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் சிறு தேயிலை விவசாயிகளின் இந்தப் பிரச்னை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணவே, கடந்த 2001 -ம் ஆண்டு ஆட்சியில், ‘ஊட்டி டீ’ என்ற பெயரில் ரேஷன் கடைகளில் டீ தூள் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான டீ தூள் 100 சதவீதமும், நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டுமே பெறப்பட்டன. இதனால் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறு தேயிலை விவசாயிகள் பெரும் பயனடைந்து வந்தனர்.

ஆனால், தற்போதுள்ள திமுக அரசு ரேஷன் கடைகளில் விற்கப்படும் ‘ஊட்டி டீ’க்காக நீலகிரி மாவட்டத்தில் இருந்து 50 முதல் 60 சதவீதம் மட்டுமே டீ தூளை கொள்முதல் செய்கிறது. 40 முதல் 50 சதவீதம் டீ தூள் அசாம் போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் பெறப்படுகின்றன.

தொடக்கத்தில் 4 லட்சத்து 50 ஆயிரம் கிலோ வரை விற்கப்பட்ட ஊட்டி டீ, தற்போது 2 லட்சம் கிலோ மட்டுமே விற்கப்படுகிறது. கடந்த ஆட்சியில், தொடங்கப்பட்ட திட்டம் என்பதால் இதனை செயல்படுத்துவதில் திமுக அரசு அக்கறை காட்டவில்லை என்று தெரிகிறது. இதனால், நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, அவர்களின் நலன் கருதி, ரேஷன் கடைகளில், ‘ஊட்டி டீ’ தூள் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ‘ஊட்டி டீ’க்காக 100 சதவீத டீ தூளையும், நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டுமே பெற வேண்டும்.

இதற்காக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை விவசாயிகளிடம் பசுந் தேயிலையை நியாயமான விலையில் கொள்முதல் செய்ய வேண்டும். எனவே, இந்த விவகாரத்தில், முதலமைச்சர் இப்பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: vanathi srinivasan bjptea
ShareTweetSendShare
Previous Post

ஞானவாபி மசூதி வழக்கு: 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Next Post

முதல்லே +2 பாடம் படிங்க!- சேகர் பாபு, உதயநிதி இருவருக்கும் அண்ணாமலை அறிவுறுத்தல்!

Related News

5-ம் தலைமுறை போர் விமானம் : பிரான்ஸுடன் கைகோர்க்கும் DRDO – சிறப்பு தொகுப்பு!

உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர் மீது கண்டெய்னர் லாரி மோதல் – 8 பக்தர்கள் பலி!

எம்மதமும் சம்மதம் என்பதே ஹிந்து மதத்தின் நிலைப்பாடு – அண்ணாமலை

மத்திய பிரதேசத்தில் இரு கிராமங்களுக்கு இடையே நடைபெற்ற கல்வீச்சு திருவிழா!

ஸ்பெயினில் அதிக வெப்பம் காரணமாக தீப்பற்றி எரிந்த சோலார் பேனல்கள்!

உ.பி.யில் ஸ்பைடர் மேன் வேடம் அணிந்து எல்லை மீறிய இளைஞர்!

Load More

அண்மைச் செய்திகள்

சிம்லாவில் ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்த நபர் – போலீஸ் விசாரணை!

ஜம்மு காஷ்மீரில் கொட்டித் தீர்த்த மழை – சாகர் காட் ஆற்றுப்பாலம் சேதம்!

ராஜஸ்தானில் கனமழையை தொடர்ந்து உருவான புதிய நீர்வீழ்ச்சி!

திருப்பூரில் 100 வயது பாட்டியின் பிறந்த நாள் – 97 பேரன், பேத்திகளுடன் களைகட்டிய கொண்டாட்டம்!

முதல்முறையாக கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயமில்லை – நிதியமைச்சகம் விளக்கம்!

உள்நாட்டு தயாரிப்புகளை வாங்கி பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தராகண்ட் மாநிலங்களில் தொடர் மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை!

வடமேற்கு வங்கக்கடலில் இன்று உருவாகுகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

நோயாளி இல்லாமல் இபிஎஸ் கூட்டத்திற்குள் சென்ற ஆம்புலன்ஸ் – சரமாரி கேள்வி கேட்ட அதிமுகவினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies