ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் திமுக அரசு மெத்தனப்போக்கு- அண்ணாமலை குற்றச்சாட்டு!
Nov 15, 2025, 05:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் திமுக அரசு மெத்தனப்போக்கு- அண்ணாமலை குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Sep 12, 2023, 08:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் குளறுப்படிகள் நிகழ்ந்தும்  திமுக அரசு மெத்தனப்போக்கில் நடந்து கொண்டதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

ஊழல் திமுக ஆட்சியில், அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒரு சட்டம், பொதுமக்களுக்கு ஒரு சட்டம் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நேற்றைய முன்தினம் சென்னையில் நடைபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில், நிகழ்ச்சி ஏற்பாட்டில் பல்வேறு குறைபாடுகள் காரணமாகப் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிந்தேன்.

சரியான இருக்கை வசதி ஏற்படுத்திக் கொடுக்காதது, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தாதது, வாகன நிறுத்த ஏற்பாடுகளை சரிவர செய்யாதது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் ஒட்டு மொத்த தோல்வியால், பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

இவற்றை எல்லாம் விட, கூட்ட நெரிசலில், பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யாத நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?

ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்தும் முன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எத்தனை முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்; தமிழக அரசும் அவற்றைக் கண்காணித்து, முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், ஒட்டு மொத்தமாக இரண்டு தரப்பிலும் தங்கள் கடமைகளிலிருந்து தவறி, பொதுமக்களை அவதிக்குள்ளாக்கியிருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாது, பெருமளவில் புகார்கள் எழுந்தும், பாலியல் சீண்டல்கள் குறித்துப் புகார்கள் வந்தும், தமிழக அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது.

எதிர்க்கட்சியினர் தவறே செய்யாவிடினும் அவர்களை காவல்துறை மூலம் துன்புறுத்துவதும், தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள், தங்களைச் சார்ந்தவர்கள் தவறே செய்தாலும், அதனைக் கண்டும் காணாமல் இருப்பதும் திமுகவுக்கு புதிது அல்ல.

ஆனால், இத்தனை பெரிய நிகழ்ச்சி ஒன்றில், ஆயிரம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டும், திமுக அரசு மெத்தனப்போக்கில் இருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தங்களுக்கு பல வேண்டப்பட்டவர்களைக் காப்பாற்ற, பொதுமக்களை எத்தனை தூரம் வஞ்சிக்கவும் திமுக தயங்காது என்பதையே இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டியிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalaiar rahman
ShareTweetSendShare
Previous Post

செல்பி எடுத்து அசத்தும் விலங்குகள் !

Next Post

திமுகவின் கபட நாடகம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது- அண்ணாமலை!

Related News

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies