ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் திமுக அரசு மெத்தனப்போக்கு- அண்ணாமலை குற்றச்சாட்டு!
Mar 15, 2026, 07:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் திமுக அரசு மெத்தனப்போக்கு- அண்ணாமலை குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Sep 12, 2023, 08:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் குளறுப்படிகள் நிகழ்ந்தும்  திமுக அரசு மெத்தனப்போக்கில் நடந்து கொண்டதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

ஊழல் திமுக ஆட்சியில், அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒரு சட்டம், பொதுமக்களுக்கு ஒரு சட்டம் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நேற்றைய முன்தினம் சென்னையில் நடைபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில், நிகழ்ச்சி ஏற்பாட்டில் பல்வேறு குறைபாடுகள் காரணமாகப் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிந்தேன்.

சரியான இருக்கை வசதி ஏற்படுத்திக் கொடுக்காதது, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தாதது, வாகன நிறுத்த ஏற்பாடுகளை சரிவர செய்யாதது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் ஒட்டு மொத்த தோல்வியால், பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

இவற்றை எல்லாம் விட, கூட்ட நெரிசலில், பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யாத நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?

ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்தும் முன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எத்தனை முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்; தமிழக அரசும் அவற்றைக் கண்காணித்து, முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், ஒட்டு மொத்தமாக இரண்டு தரப்பிலும் தங்கள் கடமைகளிலிருந்து தவறி, பொதுமக்களை அவதிக்குள்ளாக்கியிருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாது, பெருமளவில் புகார்கள் எழுந்தும், பாலியல் சீண்டல்கள் குறித்துப் புகார்கள் வந்தும், தமிழக அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது.

எதிர்க்கட்சியினர் தவறே செய்யாவிடினும் அவர்களை காவல்துறை மூலம் துன்புறுத்துவதும், தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள், தங்களைச் சார்ந்தவர்கள் தவறே செய்தாலும், அதனைக் கண்டும் காணாமல் இருப்பதும் திமுகவுக்கு புதிது அல்ல.

ஆனால், இத்தனை பெரிய நிகழ்ச்சி ஒன்றில், ஆயிரம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டும், திமுக அரசு மெத்தனப்போக்கில் இருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தங்களுக்கு பல வேண்டப்பட்டவர்களைக் காப்பாற்ற, பொதுமக்களை எத்தனை தூரம் வஞ்சிக்கவும் திமுக தயங்காது என்பதையே இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டியிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalaiar rahman
ShareTweetSendShare
Previous Post

செல்பி எடுத்து அசத்தும் விலங்குகள் !

Next Post

திமுகவின் கபட நாடகம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது- அண்ணாமலை!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies