ஆவின் நெய், வெண்ணெய்: வரலாறு காணாத அளவு உயர்வு – மக்கள் அதிர்ச்சி!
Jul 23, 2025, 11:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆவின் நெய், வெண்ணெய்: வரலாறு காணாத அளவு உயர்வு – மக்கள் அதிர்ச்சி!

Web Desk by Web Desk
Sep 14, 2023, 06:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் நிறுவனம், நெய் மற்றும் வெண்ணெய் விற்பனை விலையை வரலாறு காணாத அளவு உயர்த்தியுள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விற்பனை விலையை வரலாறு காணாத வகையில், அதுவும் தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக உயர்த்தியுள்ளது.

நெய் விற்பனையைப் பொறுத்தவரை, 100 மிலி பாக்கெட் ரூ.70 -லிருந்து ரூ.80 ஆகவும், ஜார் ரூ.75 -லிருந்து ரூ. 85 -ஆகவும், ௨௦௦ மிலி ஜார் ரூ.145 -லிருந்து ரூ.160 ஆகவும், 500 மிலி பாக்கெட் ரூ. 310 -லிருந்து ரூ.360 ஆகவும், ஜார் ரூ.315 -லிருந்து ரூ.365 ஆகவும், 1 லிட்டர் பாக்கெட் ரூ.620 -லிருந்து ரூ.690 ஆகவும், ஜார் ரூ. 630 ரூபாயிலிருந்து 700 – ஆகவும் உயர்த்தியுள்ளது. குறிப்பாக, ஒரு லிட்டருக்கு ரூ.70 முதல் ரூ.100 வரை உயர்த்தியுள்ளது.

வெண்ணெய், 100 கிராம் 55 ரூபாயிலிருந்து 60 ரூபாயாகவும், சமையல் வெண்ணெய் 500 கிராம் 260 ரூபாயிலிருந்து 275 ரூபாயாகவும், உப்பு வெண்ணெய் 500 கிராம் 275 ரூபாயிலிருந்து 280 ரூபாயாகவும், என ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு உடனே அதாவது இன்று (14.09.2023) முதல் அமுலுக்கு வருவதாக ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் நிர்வாகத்தின் விலை உயர்வுக்கு, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெய், வெண்ணெய் விற்பனை விலை உயர்வினை பொதுமக்களுக்குத் தெரிவிக்கப் பால் முகவர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை.

அத்துடன் விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் எனத் தொடர்ந்து பண்டிகை காலங்கள் நெருங்கி வருகிறது.

மேலும், சுவாமி ஐயப்பனுக்கு மாலை அணிந்து, விரதமிருந்து சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கும் நெய் பயன்பாடு அதிகளவில் தேவைப்படும் சூழலில் ஏழை, எளிய, நடுத்தர மக்களை இந்த விலை உயர்வு கடுமையாகப் பாதிக்கும்.

மேலும், ஆவின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் நெய் விற்பனை விலையை ஒரு லிட்டருக்கு 100 ரூபாய் வரை உயர்த்தியதை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும், மக்கள் விரோத நடவடிக்கைகளில் திமுக அரசு தொடர்ந்து ஈடுபடுமானால் வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டம் தெரிவித்துள்ளது.

ஆவின் விலை உயர்வுக்கு, பொது மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags: aavinproducts
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானுக்கு எதிராக ஜம்முவில் போராட்டம்!

Next Post

சுடலை ஆண்டவர் சுவாமி சிலை உடைப்பு – நெல்லையில் பதற்றம்!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies