ஆவின் நெய், வெண்ணெய்: வரலாறு காணாத அளவு உயர்வு – மக்கள் அதிர்ச்சி!
Jan 14, 2026, 07:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆவின் நெய், வெண்ணெய்: வரலாறு காணாத அளவு உயர்வு – மக்கள் அதிர்ச்சி!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 14, 2023, 06:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் நிறுவனம், நெய் மற்றும் வெண்ணெய் விற்பனை விலையை வரலாறு காணாத அளவு உயர்த்தியுள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விற்பனை விலையை வரலாறு காணாத வகையில், அதுவும் தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக உயர்த்தியுள்ளது.

நெய் விற்பனையைப் பொறுத்தவரை, 100 மிலி பாக்கெட் ரூ.70 -லிருந்து ரூ.80 ஆகவும், ஜார் ரூ.75 -லிருந்து ரூ. 85 -ஆகவும், ௨௦௦ மிலி ஜார் ரூ.145 -லிருந்து ரூ.160 ஆகவும், 500 மிலி பாக்கெட் ரூ. 310 -லிருந்து ரூ.360 ஆகவும், ஜார் ரூ.315 -லிருந்து ரூ.365 ஆகவும், 1 லிட்டர் பாக்கெட் ரூ.620 -லிருந்து ரூ.690 ஆகவும், ஜார் ரூ. 630 ரூபாயிலிருந்து 700 – ஆகவும் உயர்த்தியுள்ளது. குறிப்பாக, ஒரு லிட்டருக்கு ரூ.70 முதல் ரூ.100 வரை உயர்த்தியுள்ளது.

வெண்ணெய், 100 கிராம் 55 ரூபாயிலிருந்து 60 ரூபாயாகவும், சமையல் வெண்ணெய் 500 கிராம் 260 ரூபாயிலிருந்து 275 ரூபாயாகவும், உப்பு வெண்ணெய் 500 கிராம் 275 ரூபாயிலிருந்து 280 ரூபாயாகவும், என ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு உடனே அதாவது இன்று (14.09.2023) முதல் அமுலுக்கு வருவதாக ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் நிர்வாகத்தின் விலை உயர்வுக்கு, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெய், வெண்ணெய் விற்பனை விலை உயர்வினை பொதுமக்களுக்குத் தெரிவிக்கப் பால் முகவர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை.

அத்துடன் விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் எனத் தொடர்ந்து பண்டிகை காலங்கள் நெருங்கி வருகிறது.

மேலும், சுவாமி ஐயப்பனுக்கு மாலை அணிந்து, விரதமிருந்து சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கும் நெய் பயன்பாடு அதிகளவில் தேவைப்படும் சூழலில் ஏழை, எளிய, நடுத்தர மக்களை இந்த விலை உயர்வு கடுமையாகப் பாதிக்கும்.

மேலும், ஆவின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் நெய் விற்பனை விலையை ஒரு லிட்டருக்கு 100 ரூபாய் வரை உயர்த்தியதை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும், மக்கள் விரோத நடவடிக்கைகளில் திமுக அரசு தொடர்ந்து ஈடுபடுமானால் வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டம் தெரிவித்துள்ளது.

ஆவின் விலை உயர்வுக்கு, பொது மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags: aavinproducts
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானுக்கு எதிராக ஜம்முவில் போராட்டம்!

Next Post

சுடலை ஆண்டவர் சுவாமி சிலை உடைப்பு – நெல்லையில் பதற்றம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies