சென்னை விமான நிலையத்தில் மலைப்பாம்பு குட்டிகள் பறிமுதல்.
Sep 9, 2025, 06:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் மலைப்பாம்பு குட்டிகள் பறிமுதல்.

Web Desk by Web Desk
Sep 14, 2023, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை விமான நிலையத்தில் 14 அரியவகை மலைப்பாம்பு குட்டிகள் மற்றும் ஒரு அணிலைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னைக்குத் தாய் ஏர்வேஸ் விமானம் வந்து இறங்கியது. அதில், பயணம் செய்த இளைஞர் ஒருவர் 2 பிளாஸ்டிக் கூடைகளை வைத்திருந்தார்.

இதனையடுத்து சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் பிளாஸ்டிக் கூடைகளைச் சோதனையிட்ட போது, அவற்றில் 15 அரியவகை மலைப் பாம்பு குட்டிகள் மற்றும் அணில் ஒன்றும் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில், இந்த வகை பாம்புகள் வட அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் அடர்ந்த வனப்பகுதிகளிலும், குளிர்பிரதேசங்களிலும் இருக்கக்கூடியவை. இந்த பாம்புகள் விஷமற்றவை ஆனால் ஆபத்தானவை.

மேலும், ஒன்றரை அடி நீளம் வரை வளரக்கூடிய அணில் குட்டி ஆப்பிரிக்கக் கண்டத்தில் அடர்ந்த காடுகளில் வசிக்கக்கூடியது.

மலைப் பாம்புக் குட்டிகளைக் கடத்தி வந்த பயணியிடம், எந்த ஆவணங்களும் இல்லை. இதையடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மலைப்பாம்பு குட்டி, அணில் ஆகியவை எந்த நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டதோ, அதே நாட்டுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்து உள்ளனர்.

அவை சென்னையில் இருந்து, தாய்லாந்து நாட்டின் பாங்காக் செல்லும் விமானத்தில் திருப்பி அனுப்பப்படுகிறது. இதற்கான விமான செலவுகள் அனைத்தையும் கடத்தி வந்த இளைஞரிடம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: snakeairport customs
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் இளம் பணக்காரர்!-கைவல்யா வோஹ்ரா.

Next Post

தேசவிரோத குணங்கள் அவ்வப்போது வெளிநாடுகளில் வெளிப்படுகின்றன!

Related News

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

சோனியா காந்தியை, அவரது மகன் ராகுல் காந்தி அவமதித்ததாக குற்றச்சாட்டு!

ஹிமாச்சல பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு – விமானம் மூலம் பார்வையிட்ட பிரதமர் மோடி!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies