சூப்பர் போர்ஸ் சுற்றின் 5வது ஆட்டத்தில் இலங்கை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி கண்டது. இலங்கை அணி டிஎல்எஸ் முறைப்படி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பாக்கிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் ஃபகார் ஜமான் களமிறங்கினர். இதில் அப்துல்லா அரைசதம் எடுத்து ஆட்டம் இழந்தார். ஜமான் 4 ரன்களிலே ஆட்டமிழந்தார். பின்பு களமிறங்கிய ரிஸ்வான் சிறப்பாக விலைடி 86 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பின்பு அடுத்தடுத்து விக்கெட்கள் விழ ஆட்டமுடிவில் 252 ரன்களை எடுத்தது பாகிஸ்தான் அணி. இலங்கையில் அதிகபட்சமாக மதிஷா பதிரான 3 விக்கெட்களை எடுத்தார்.
மழை காரணமாக 42 ஓவர்களில் 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை விளையாடியது. இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் பதும் நிசங்கா, 29 ரன்களிலும், குசால் பெரேரா 17 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.
எனினும், 3வது வரிசையில் களம் புகுந்த குசல் மெண்டிஸ், சதீரா சமரவிக்ரமா ஆகியோர் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரின் பார்ட்னர்ஷிப் இணைந்து 100 ரன்களை அணிக்கு சேர்த்துக் கொடுத்தது. எனினும், அரை சதம் அடிக்க முயற்சித்த சதீரா, இப்திகார் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
குசல் மெண்டிஸ் 91 ரன்கள் எடுத்திருந்தபோது எதிர்பாராதவிதமாக இப்திகார் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த கேப்டன் ஷனகா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் 8 விக்கெட் வரை விழுந்தது. கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், அசலங்கா பந்தை பவுண்டரி எல்லைக்கு விரட்டி 2 ரன்கள் ஓடினார். இவ்வாறாக 42 ஓவர்களில் இலக்கை எட்டி இலங்கை வெற்றி அடைந்தது.
இதன்மூலம், இலங்கை அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப்போட்டியில் மோதியுள்ளனர்.