அயோத்தியில் ஸ்ரீஇராமர் கோவில்:- வரும் ஜனவரி 26-ம் தேதிக்குள் திறக்கப்படும்.
Jul 25, 2025, 08:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தியில் ஸ்ரீஇராமர் கோவில்:- வரும் ஜனவரி 26-ம் தேதிக்குள் திறக்கப்படும்.

கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தகவல்!

Web Desk by Web Desk
Sep 27, 2023, 08:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமர் கோவில் கட்டுமானப் பணி வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, ஜனவரி 26-ம் தேதிக்கு முன்பு பக்தர்களின் தரிசனத்துக்காகத் திறக்கப்படும் என்று கோவில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்திருக்கிறார்.

அயோத்தியில் ஸ்ரீ இராமர் கோவில் கட்டுமானப் பணிக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

இப்பணிகள் 2023-ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அயோத்தி ஸ்ரீ இராமர் கோவில் கட்டுமானப் பணி வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, ஜனவரி மாதம் 26-ம் தேதிக்கு முன்பு பக்தர்களின் தரிசனத்துக்கு திறக்கப்படும் என்று கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு நிருபேந்திர மிஸ்ரா அளித்த பேட்டியில், “இக்கோவில் 2 பகுதிகளாக கட்டி முடிக்கப்படவிருக்கிறது. முதல் பகுதியானது சுமார் 2.6 ஏக்கர் பரப்பளவில் கோவிலின் தரைத்தளம் அமைக்கப்படுகிறது. இத்தளத்தில் 5 மண்டபங்கள் கட்டப்படுகின்றன. இங்கு விரைவில் கருவறையில் குழந்தை ராமர் திருமேனி நிறுவப்படும்.

மேலும், தரைத் தளத்தில் 160 தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணிலும் வெவ்வேறு வடிவங்களில் 25 ஐகானோகிராஃபிக்கல் வேலைகள் அமைக்கப்படுகின்றன. வால்மீகி ராமாயணத்தில் இருந்து எடுக்கப்பட்ட கல்லில் செதுக்கப்பட்ட இராமர் கதையைக் கூறும் கீழ் பீடத்தின் பணி சுமார் 50 சதவீதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், கும்பாபிஷேக தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பிரதமர் அலுவலகம் கொடுக்கும் தேதியைப் பொறுத்து கும்பாபிஷேக தேதி முடிவு செய்யப்படும். எனினும், 2024 ஜனவரி 26-ம் தேதிக்கு முன்பு, பக்தர்கள் இராமரை கண்டிப்பாக தரிசிக்க முடியும்” என்றார்.

அயோத்தி வழக்கில் 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து, அயோத்தியில் பிரம்மாண்டமான இராமர் கோயில் கட்டுவது தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கு மத்திய அரசு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையை அமைத்தது. இந்த அறக்கட்டளையின் மேற்பார்வையில்தான் தற்போது கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ayodhyaRamar TempleJanuary 26
ShareTweetSendShare
Previous Post

சென்னை ஐஐடி-க்கு புதிய அங்கீகாரம்!

Next Post

டெங்குவைக் கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள்:- மாநில அரசுகளுக்கு அறிவுரை.-மன்சுக் மாண்டவியா!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies