அயோத்தியில் ஸ்ரீஇராமர் கோவில்:- வரும் ஜனவரி 26-ம் தேதிக்குள் திறக்கப்படும்.
Jun 6, 2025, 05:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தியில் ஸ்ரீஇராமர் கோவில்:- வரும் ஜனவரி 26-ம் தேதிக்குள் திறக்கப்படும்.

கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தகவல்!

Web Desk by Web Desk
Sep 27, 2023, 08:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமர் கோவில் கட்டுமானப் பணி வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, ஜனவரி 26-ம் தேதிக்கு முன்பு பக்தர்களின் தரிசனத்துக்காகத் திறக்கப்படும் என்று கோவில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்திருக்கிறார்.

அயோத்தியில் ஸ்ரீ இராமர் கோவில் கட்டுமானப் பணிக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

இப்பணிகள் 2023-ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அயோத்தி ஸ்ரீ இராமர் கோவில் கட்டுமானப் பணி வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, ஜனவரி மாதம் 26-ம் தேதிக்கு முன்பு பக்தர்களின் தரிசனத்துக்கு திறக்கப்படும் என்று கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு நிருபேந்திர மிஸ்ரா அளித்த பேட்டியில், “இக்கோவில் 2 பகுதிகளாக கட்டி முடிக்கப்படவிருக்கிறது. முதல் பகுதியானது சுமார் 2.6 ஏக்கர் பரப்பளவில் கோவிலின் தரைத்தளம் அமைக்கப்படுகிறது. இத்தளத்தில் 5 மண்டபங்கள் கட்டப்படுகின்றன. இங்கு விரைவில் கருவறையில் குழந்தை ராமர் திருமேனி நிறுவப்படும்.

மேலும், தரைத் தளத்தில் 160 தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணிலும் வெவ்வேறு வடிவங்களில் 25 ஐகானோகிராஃபிக்கல் வேலைகள் அமைக்கப்படுகின்றன. வால்மீகி ராமாயணத்தில் இருந்து எடுக்கப்பட்ட கல்லில் செதுக்கப்பட்ட இராமர் கதையைக் கூறும் கீழ் பீடத்தின் பணி சுமார் 50 சதவீதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், கும்பாபிஷேக தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பிரதமர் அலுவலகம் கொடுக்கும் தேதியைப் பொறுத்து கும்பாபிஷேக தேதி முடிவு செய்யப்படும். எனினும், 2024 ஜனவரி 26-ம் தேதிக்கு முன்பு, பக்தர்கள் இராமரை கண்டிப்பாக தரிசிக்க முடியும்” என்றார்.

அயோத்தி வழக்கில் 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து, அயோத்தியில் பிரம்மாண்டமான இராமர் கோயில் கட்டுவது தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கு மத்திய அரசு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையை அமைத்தது. இந்த அறக்கட்டளையின் மேற்பார்வையில்தான் தற்போது கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ayodhyaRamar TempleJanuary 26
ShareTweetSendShare
Previous Post

சென்னை ஐஐடி-க்கு புதிய அங்கீகாரம்!

Next Post

டெங்குவைக் கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள்:- மாநில அரசுகளுக்கு அறிவுரை.-மன்சுக் மாண்டவியா!

Related News

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

உலகின் முதல் சைவ நகரம்!

கொடூரமான வான் வேட்டைக்காரன் R-37M அதி நவீன ஏவுகணை : இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முடிவு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

Load More

அண்மைச் செய்திகள்

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறது தமிழக அரசு : நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி : கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வெறும் கண்காட்சிக்காக கட்டப்பட்டதா, முதல்வரே? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்!

உத்தரப் பிரதேசம் யமுனை நதியில் மூழ்கி 6 சிறுமிகள் உயிரிழப்பு!

ஆந்திரா : ஆட்டோ மீது கார் மோதி விபத்து – 4 பேர் பலி!

குஜராத் : முட்டை, இறைச்சி இல்லாத உலகின் முதல் சைவ நகரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies