அயோத்தியில் ஸ்ரீஇராமர் கோவில்:- வரும் ஜனவரி 26-ம் தேதிக்குள் திறக்கப்படும்.
Jan 14, 2026, 06:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தியில் ஸ்ரீஇராமர் கோவில்:- வரும் ஜனவரி 26-ம் தேதிக்குள் திறக்கப்படும்.

கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 27, 2023, 08:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமர் கோவில் கட்டுமானப் பணி வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, ஜனவரி 26-ம் தேதிக்கு முன்பு பக்தர்களின் தரிசனத்துக்காகத் திறக்கப்படும் என்று கோவில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்திருக்கிறார்.

அயோத்தியில் ஸ்ரீ இராமர் கோவில் கட்டுமானப் பணிக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

இப்பணிகள் 2023-ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அயோத்தி ஸ்ரீ இராமர் கோவில் கட்டுமானப் பணி வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, ஜனவரி மாதம் 26-ம் தேதிக்கு முன்பு பக்தர்களின் தரிசனத்துக்கு திறக்கப்படும் என்று கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு நிருபேந்திர மிஸ்ரா அளித்த பேட்டியில், “இக்கோவில் 2 பகுதிகளாக கட்டி முடிக்கப்படவிருக்கிறது. முதல் பகுதியானது சுமார் 2.6 ஏக்கர் பரப்பளவில் கோவிலின் தரைத்தளம் அமைக்கப்படுகிறது. இத்தளத்தில் 5 மண்டபங்கள் கட்டப்படுகின்றன. இங்கு விரைவில் கருவறையில் குழந்தை ராமர் திருமேனி நிறுவப்படும்.

மேலும், தரைத் தளத்தில் 160 தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணிலும் வெவ்வேறு வடிவங்களில் 25 ஐகானோகிராஃபிக்கல் வேலைகள் அமைக்கப்படுகின்றன. வால்மீகி ராமாயணத்தில் இருந்து எடுக்கப்பட்ட கல்லில் செதுக்கப்பட்ட இராமர் கதையைக் கூறும் கீழ் பீடத்தின் பணி சுமார் 50 சதவீதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், கும்பாபிஷேக தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பிரதமர் அலுவலகம் கொடுக்கும் தேதியைப் பொறுத்து கும்பாபிஷேக தேதி முடிவு செய்யப்படும். எனினும், 2024 ஜனவரி 26-ம் தேதிக்கு முன்பு, பக்தர்கள் இராமரை கண்டிப்பாக தரிசிக்க முடியும்” என்றார்.

அயோத்தி வழக்கில் 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து, அயோத்தியில் பிரம்மாண்டமான இராமர் கோயில் கட்டுவது தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கு மத்திய அரசு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையை அமைத்தது. இந்த அறக்கட்டளையின் மேற்பார்வையில்தான் தற்போது கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ayodhyaRamar TempleJanuary 26
ShareTweetSendShare
Previous Post

சென்னை ஐஐடி-க்கு புதிய அங்கீகாரம்!

Next Post

டெங்குவைக் கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள்:- மாநில அரசுகளுக்கு அறிவுரை.-மன்சுக் மாண்டவியா!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies