அயோத்தியில் ஸ்ரீஇராமர் கோவில்:- வரும் ஜனவரி 26-ம் தேதிக்குள் திறக்கப்படும்.
Sep 13, 2026, 01:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தியில் ஸ்ரீஇராமர் கோவில்:- வரும் ஜனவரி 26-ம் தேதிக்குள் திறக்கப்படும்.

கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 27, 2023, 08:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி இராமர் கோவில் கட்டுமானப் பணி வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, ஜனவரி 26-ம் தேதிக்கு முன்பு பக்தர்களின் தரிசனத்துக்காகத் திறக்கப்படும் என்று கோவில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்திருக்கிறார்.

அயோத்தியில் ஸ்ரீ இராமர் கோவில் கட்டுமானப் பணிக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

இப்பணிகள் 2023-ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அயோத்தி ஸ்ரீ இராமர் கோவில் கட்டுமானப் பணி வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, ஜனவரி மாதம் 26-ம் தேதிக்கு முன்பு பக்தர்களின் தரிசனத்துக்கு திறக்கப்படும் என்று கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு நிருபேந்திர மிஸ்ரா அளித்த பேட்டியில், “இக்கோவில் 2 பகுதிகளாக கட்டி முடிக்கப்படவிருக்கிறது. முதல் பகுதியானது சுமார் 2.6 ஏக்கர் பரப்பளவில் கோவிலின் தரைத்தளம் அமைக்கப்படுகிறது. இத்தளத்தில் 5 மண்டபங்கள் கட்டப்படுகின்றன. இங்கு விரைவில் கருவறையில் குழந்தை ராமர் திருமேனி நிறுவப்படும்.

மேலும், தரைத் தளத்தில் 160 தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணிலும் வெவ்வேறு வடிவங்களில் 25 ஐகானோகிராஃபிக்கல் வேலைகள் அமைக்கப்படுகின்றன. வால்மீகி ராமாயணத்தில் இருந்து எடுக்கப்பட்ட கல்லில் செதுக்கப்பட்ட இராமர் கதையைக் கூறும் கீழ் பீடத்தின் பணி சுமார் 50 சதவீதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், கும்பாபிஷேக தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பிரதமர் அலுவலகம் கொடுக்கும் தேதியைப் பொறுத்து கும்பாபிஷேக தேதி முடிவு செய்யப்படும். எனினும், 2024 ஜனவரி 26-ம் தேதிக்கு முன்பு, பக்தர்கள் இராமரை கண்டிப்பாக தரிசிக்க முடியும்” என்றார்.

அயோத்தி வழக்கில் 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து, அயோத்தியில் பிரம்மாண்டமான இராமர் கோயில் கட்டுவது தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கு மத்திய அரசு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையை அமைத்தது. இந்த அறக்கட்டளையின் மேற்பார்வையில்தான் தற்போது கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ayodhyaRamar TempleJanuary 26
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை ஐஐடி-க்கு புதிய அங்கீகாரம்!

Next Post

டெங்குவைக் கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள்:- மாநில அரசுகளுக்கு அறிவுரை.-மன்சுக் மாண்டவியா!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies