பெண்கள் மீது காங்கிரஸ் கட்சிக்கு அக்கறை இல்லை. அதனால்தான், பல தசாப்தங்களாக பெண்களை பறிகொடுத்திருக்கிறார்கள் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் துடிப்பான குஜராத் 20-வது உச்சிமாநாடு இன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மாலையில் வதோதராவுக்குச் சென்றார். அங்கு பிரம்மாண்ட ரோடு ஷோவை நடத்திய பிரதமர் மோடி, தொடர்ந்து ‘நாரி சக்தி வந்தன் அபிநந்தன் காரியக்ரம்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “பெண்கள் மேம்பாட்டில் உண்மையாகவே எதிர்க்கட்சிகள் அக்கறை கொண்டிருந்தால், பல தசாப்தங்களாக அவர்களைப் பறிகொடுத்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்று மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்கிய நாரி சக்தி வந்தன் ஆதினியம் (மகளிர் இடஒதுக்கீடு மசோதா) நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
பெண்களுக்கான கழிப்பறைகள் பற்றி நான் பேசியபோதும், பெண்களுக்கான ஜன்தன் கணக்குகள் பற்றி நான் பேசியபோதும் என்னை கேலி செய்தவர்கள் இவர்கள்தான். உஜ்வாலா யோஜனா திட்டத்தை கேலி செய்தார்கள். முஸ்லீம் பெண்களை முத்தலாக்கிலிருந்து விடுவிப்பது பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, அவர்கள் தங்கள் அரசியல் சமன்பாடுகள் பற்றி கவலைப்பட்டனர்.
எதிர்கட்சிகள் முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்கள் தங்கள் வாக்கு வங்கியைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள். முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்தபோது, முஸ்லிம் பெண்களின் உரிமைக்காக ஏன் நிற்கவில்லை?” என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.