தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் கனடா – என்ன காரணம்?
Oct 29, 2025, 03:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் கனடா – என்ன காரணம்?

Web Desk by Web Desk
Sep 28, 2023, 10:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

இந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்மான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இதில், இந்திய ஏஜெண்டுகளின் பங்கு உள்ளது என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டினார். அவரது குற்றச்சாட்டை இந்தியா திட்டமவட்டமாக மறுத்தது.

கனடா மண்ணில் கனடாவின் குடிமகனின் கொலைக்குப் பின்னால் இந்திய அரசு இருக்கலாம் என்று கனேடிய அமைப்புகள் கருதுகின்றன என்றும், நமது மண்ணில் நடந்த கொலைக்குப் பின்னால் வெளிநாட்டு அரசு இருப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்றும், இது நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் என்றும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கனடாவில் உள்ள இந்தியாவின் தூதரக அதிகாரியை அந்நாட்டு அரசு வெளியேற்றியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவில் இருந்த கனடாவின் தூதரக அதிகாரியை 5 நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசும் உத்தரவிட்டது.

மேலும், இந்திய தூதரகம் கனடியர்களின் விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியது. இந்தியாவின், இந்த அதிரடி காரணமாக, கனடா நாடு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

சரி, அன்று முதல் இன்று வரை
உண்மையில் என்னதான் நடக்கிறது?

காலிஸ்தானிகள் கனடாவில் தஞ்சம் அடைவது புதிதல்ல. இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக இந்த பிரச்சினை இருந்து வருகிறது.

காலிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னரே, கனடாவில் ஒருங்கிணைக்கப்பட்ட பயங்கரவாத வலையமைப்பை உருவாக்கி விட்டனர்.

கடந்த 1971 -ம் ஆண்டில், இந்தியாவின் ஆனந்த்பூர் சாஹிப் நகரில் பிரிவினைவாதத் தீர்மானத்தை காலிஸ்தான் நிறைவேற்றியது. மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல்வாதியும், பல் மருத்துவருமான ஜக்ஜித் சிங் சவுகான், கனடாவில் தங்கியிருந்தபோது தன்னை காலிஸ்தானின் ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்டார். நாங்கள் இனி காத்திருக்கப் போவதில்லை. இறுதிப் போரைத் தொடங்குகிறோம். இது எங்கள் சொந்த தேசம் என உரிமை கொண்டினர்.

அதே 1971-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தானின் சுல்பிகர் அலி பூட்டோ காலிஸ்தானித் தலைவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டினார். இதன் மூலம் காலிஸ்தான் – பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஒன்றோடு ஒன்று கைகோர்த்தனர்.

இதனைத் தொடர்ந்து, கனடாவில் காலிஸ்தான் தனது வேர்களை மிக வேகமாகவும், ஆழமாகவும் வளர்த்துக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில், பொக்ரான் சோதனை தளத்தில் இந்தியாவின் முதல் அணு ஆயுதத்தை வெடிக்கச் செய்தது.

கனேடிய ஒத்துழைப்போடு இயக்கப்பட்ட CIRUS அணு உலையில் இருந்து புளூட்டோனியம் பயன்படுத்தப்பட்டது. இது கனடாவை கோபப்படுத்தியது. ஆனால், இது ஒரு அமைதியான அணு வெடிப்பு என்றும், கனடாவுடனான ஒப்பந்தத்தின் விதிமுறைகளை இந்தியா ஒதுபோதும் மீறவில்லை என்றும் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்தது. ஆனாலும், கனடா இதை ஏற்கவில்லை.

கனடாவின் அன்றைய பிரதமர் பியர் ட்ரூடோ, இந்தியாவின் அணுசக்தி திட்டத்தில் இருந்து அனைத்து ஆதரவையும் விலக்கிக் கொண்டார், மேலும் மற்றொரு அணு உலையில் பணிபுரிந்த கனேடிய அதிகாரிகள் திரும்ப அழைத்துக் கொண்டார். இப்படி, இந்தியா மீது தொடர் வன்மத்தை செலுத்தி வருகிறது கனடா.

இந்த நிலையில்தான், 1970 -ம் ஆண்டு முதல் 1980 -ம் ஆண்டு வரை, பியர் ட்ரூடோவின் ஆட்சியில் பெரும்பாலான காலிஸ்தானிகள் கனடாவில் குடியேறத் தொடங்கினர் என்று கனடாவுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் விஷ்ணு பிரகாஷ் உறுதிப்படத் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அன்று, ட்ரூடோவும், இந்திய பிரதமர் இந்திரா காந்தியும் வருத்தங்களை பகிர்ந்து கொண்டதையும் இதற்கு ஆதாரமாக குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமகவே, தீவிரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளான காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு கனடா பாதுகாப்பான புகலிடமாக இருந்து வருவதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதற்கான ஆதாரங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

இதனிடையே, 1985 -ல், காலிஸ்தானி தீவிரவாத அமைப்பான பாபர் கல்சா, ஏர் இந்தியா கனிஷ்கா மீது குண்டுவெடிப்பைத் திட்டமிட்டி நடத்தி 329 பேரைக் கொலை செய்தது. அப்போது, தீவிரவாத குழுவின் தலைவர் தல்விந்தர் பர்மர், பியர் ட்ரூடோவால் பாதுகாக்கப்பட்டார். இது இந்தியா – கனடா இடையே உறவுகளை மேலும் மோசமாக்கியது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது தந்தையின் வழிகளை அப்படியே பின்பற்றுகிறார் என்ற விமர்சனம் எழுத்தொடங்கிவிட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இன்றைய பாரதத்தின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், 7,70,000 சீக்கியர்கள் கனடா அரசாங்கத்திற்கு முக்கியமானவர்களாக கருத்தப்படுகின்றனர். காரணம், சீக்கியர்களை தனது வாக்கு வங்கியாக ஜஸ்டின் ட்ரூடோ பயன்படுத்த முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஆக மொத்தம், தீவிரவாத்திற்கு ஆதரவு கொடுத்து அழிந்துபோய்க்கொண்டிருக்கும் பாகிஸ்தான் போலவே, கனடாவும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலமும், ஆதரவும் கொடுத்து வருகிறது. அதன் பலனை விரைவில் கனடா அனுபவிக்கப்போகிறது என்பதே கண்முன் காணப்போகும் நிஜம்.

Tags: canada-india crisiskhsalisthan
ShareTweetSendShare
Previous Post

நெல் வாங்க மறுக்கும் அதிகாரிகள் -விவசாயிகள் புகார்!

Next Post

கிரிக்கெட்டில் இந்தியா அபார வெற்றி !

Related News

பகலில் டேப்டாப் : இரவில் ஸ்டியரிங் வீல் – தனிமையை போக்க புதிய வழி தேடும் மென்பொறியாளர்கள்!

திருமண மோசடி புகார் – மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா மகளிர் ஆணையத்தில் ஆஜர்!

இந்திய நீதித்துறையின் மந்தநிலை பொருளாதார வளர்ச்சிக்கு தடையா? : அமெரிக்க ஆராய்ச்சியாளரின் ஆய்வறிக்கை சொல்வது என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஞான பாரதம் திட்டத்தின் கீழ் பழமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடக்கம்!

100 மில்லியன் டாலரை நெருங்கும் ஆண்டு வருமானம் : உலகின் அதிக ஊதியம் பெறும் CEO-வாக மாறிய சத்ய நாதெல்லா – சிறப்பு தொகுப்பு!

பழனி தண்டாயுதபாணி கோயில் கந்த சஷ்டி திருவிழா – திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாடு – குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்!

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சரவண பவன் உணவகத்திற்கு சீல் – வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை!

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா பக்தர்கள் – நெய் விளக்கேற்றி வழிபாடு!

திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி – தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

சென்னையில் 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்!

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய் – நேரில் சந்தித்தவர் பேட்டி!

கனமழை – பள்ளிக்கரணையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஆவடி அருகே ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் மிளிரும் தமிழகம் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies