எப்படி விளையாடப் போறோமோ ? - ரோஹித் சர்மா கவலை!
Sep 8, 2025, 02:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எப்படி விளையாடப் போறோமோ ? – ரோஹித் சர்மா கவலை!

2023 ஒருநாள் உலகக் கோப்பையைக் கிரிக்கெட் தொடரை இந்திய அணி எப்படி கையாளப் போகிறது என்பதைப் பற்றி கூறியுள்ளார் ரோஹித் சர்மா.

Web Desk by Web Desk
Sep 28, 2023, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பு நேற்று நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டியின் இந்திய அணி 66 இரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இருப்பினும் 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரை இந்திய அணி எவ்வாறு கையாள போகிறது என்பது குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்சா போக்லே உடன் பேசினார்.

இதுக் குறித்து அவர், ” இந்திய அணியின் தற்போதைய சூழல் குறித்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன். தனிப்பட்ட முறையில் என்னுடையப் பேட்டிங்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்துப் போட்டி முழுவதும் விளையாட ஆசைப்படுகிறேன். இந்த போட்டியில் பௌண்டரிகளும் சிக்சர்களும் அடித்ததில் திருப்தி கொள்கிறேன். கடந்த ஏழு, எட்டு போட்டிகளாக நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறோம்” என்று கூறினார்.

மேலும் அவர், ” எங்கள் அணி பல்வேறு சூழலில் பல அணிகளுக்கு எதிராக கடும் சவால்களை எதிர்க்கொண்டுள்ளது. அந்த சவால்களை நாங்கள் சிறப்பாகவே கையாண்டோம் என்று நினைக்கிறேன். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை இருப்பினும் பும்ரா பந்துவீச்சு குறித்து எங்களுக்கு மகிழ்ச்சி தான், அவர் பந்து வீசுவதில் எந்த குறையும் இல்லை. பும்ரா பந்து வீசும் போது ஏதேனும் உடலளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து தான் நாங்கள் கவலைப்பட்டோம். ஆனால் அப்படி எந்த சிக்கலும் இதுவரை இல்லை. பும்ரா மனதளவிலும் உடலளவிலும் எப்படி இருக்கிறார் என்பது தான் எங்களுக்கு முக்கியம் ” என்று கூறினார்.

மேலும் அவர் அணியை பற்றி பேசுகையில், ” உலகக்கோப்பை தொடரில் எந்த 15 வீரர்கள் களமிறங்க போகிறார்கள் என்பது குறித்து நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்களுக்குள் எந்த ஒரு குழப்பமும் இல்லை. ஒரு அணியாக நாங்கள் எதை எதிர் கொள்ள போகிறோம் எந்த சவால்கள் காத்திருக்கிறது என்று அறிந்து வைத்திருக்கிறோம். கிரிக்கெட் என்பது தனிப்பட்ட விளையாட்டு கிடையாது. ஒரு அணியாக விளையாடுவது.

எனவே அணியில் உள்ள ஒவ்வொருமே வெற்றிக்காக தங்களுடைய பங்களிப்பை வெளிக்காட்டுவார்கள் என நான் நம்புகிறேன். அப்படி செய்தால் மட்டுமே உலகக்கோப்பை போன்ற தொடரை வெல்ல முடியும். இந்த தொடரில் நாங்கள் ஒவ்வொரு போட்டிக்கும் இடைவெளியில் உடல் அளவில் தயாராக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால், உடலளவிலும் மனதாகவிலும் தெளிவாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க வேண்டும். இதுதான் வரும் ஒன்றரை மாதத்தில் நாங்கள் கவனம் செலுத்தப் போகிறோம்” என்று கூறினார்.

Tags: world Cup Cricketrohit sharmaindian cricket team
ShareTweetSendShare
Previous Post

இந்தியா வெற்றி பெற திருப்பதியில் பிராத்தனை செய்தார் கம்பிர் !

Next Post

பாய்மரப்படகுப் போட்டி : தமிழக வீரருக்கு பதக்கம்.

Related News

“குட் பேட் அக்லி” திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

பீகார் : காங்., எம்.பியை தோளில் சுமந்த விவசாயிகள் – விவசாயிகளை காங்கிரஸ் அவமதித்து விட்டதாக பாஜக கண்டனம்!

குறைந்த யமுனை நீர்மட்டம் – சீராகும் டெல்லியின் நிலைமை!

ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்கு தமிழக அரசும், திமுக கூட்டணி கட்சிகளும் நன்றி தெரிவிக்கவில்லை : தமிழிசை செளந்தரராஜன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா!

உத்தரகாசி பகுதியில் மீண்டும் மேகவெடிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வெளிநாடு பயணங்களை நிறைவு செய்து சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்!

தருமபுரி : பட்டா மாறுதலை ரத்து செய்ய கோரி பொதுமக்கள் காவல் நிலையம் முற்றுகை!

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம் – வைகோ நடவடிக்கை

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

பஞ்சாபில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 23 மாவட்டங்கள்!

குலசேகரம் : நாராயண குருவின் 171வது ஜெயந்தி விழா!

உலக வில்வித்தை போட்டி – தங்கம் வென்ற இந்திய ஆடவர் குழு!

15 ஆண்டாக பஸ்ஸில் திருடி வந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது – அதிர்ச்சி வாக்குமூலம்!

பல்லாவரம் கண்டோன்மெண்ட் நிர்வாகத்தின் கீழ் வரும் பள்ளி வளாகத்தை  திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வாடகை விடப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஏ அணி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies