இந்தியாவுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம்: ஜெய்சங்கர் ஆவேசம்!
Mar 15, 2026, 06:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம்: ஜெய்சங்கர் ஆவேசம்!

கருத்து சுதந்திரம் குறித்து கனடாவுக்கு அமைச்சர் பதிலடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 30, 2023, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கருத்து சுதந்திரம் குறித்து எங்களுக்கு யாரும் பாடம் நடத்தத் தேவையில்லை. கருத்து சுதந்திரம் என்பது வன்முறையைத் தூண்டும் வகையில் நீடிக்கக் கூடாது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கனடாவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

காலிஸ்தான் தீவிரவாத இயக்கத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர், கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சீக்கிய குருத்துவாரா முன்பு கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதனால், இந்தியா-கனாடா இடையேயான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்க பயணம் மேற்கொண்டிருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வாஷிங்டன் டி.சி.யில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் இங்கு (அமெரிக்காவில்) கூறுகிறேன், மேலும் கனடியர்களுக்கும் இதைக் கூறிக்கொள்கிறேன். நாம் ஒரு ஜனநாயக நாடு. பேச்சு சுதந்திரம் என்றால் என்ன என்பதை நாம் மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

ஆனால், இதை மக்களுக்குச் சொல்லலாம். பேச்சுச் சுதந்திரம் என்பது வன்முறையைத் தூண்டுவதாக நாங்கள் நினைக்கவில்லை. இது எங்களுக்கு சுதந்திரத்தைப் பாதுகாப்பது அல்ல, சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும். கனடா எப்போதும் கருத்துச் சுதந்திரம், மனசாட்சி சுதந்திரம் மற்றும் அமைதியான எதிர்ப்பு சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும். அது எங்களுக்கு மிகவும் முக்கியமானது.

அதேசமயம், வன்முறையைத் தடுக்கவும், அதற்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களை பின்னுக்குத் தள்ளவும் நாங்கள் எப்போதும் இருக்கிறோம். இந்தியாவின் நிலையில் மற்ற நாடுகள் இருந்தால், அவர்களின் இராஜதந்திரிகள், தூதரகங்கள் மற்றும் குடிமக்கள் அச்சுறுத்தலை எதிர்கொண்டால் எப்படி நடந்துகொள்வார்கள்?

கனடியர்கள் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இது இந்திய அரசின் கொள்கையல்ல என்பதையும், அவர்கள் எங்களுடன் குறிப்பிட்ட மற்றும் பொருத்தமான எதையும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருந்தால், நாங்களும் அதைப் பார்க்கத் தயாராக இருக்கிறோம் என்பதையும் நாங்கள் அவர்களுக்குச் சுட்டிக்காட்டியுள்ளோம். எனவே, அந்த அர்த்தத்தில், விஷயம் அத்துடன் நிற்கிறது”என்று கூறியிருக்கிறார்.

Tags: JaishankarPress meetwashingtonForign minister
ShareTweetSendShare
Previous Post

தன் தவறை உணர்ந்துப் பேசிய விராட் கோலி !

Next Post

கேரளாவில் தொடரும் மழை – 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies