இந்தியப் பசுமைப் புரட்சியின் சிற்பியான மறைந்த டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 1925-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி பிறந்த எம்.எஸ். சுவாமிநாதன், தனது கடின உழைப்பால் இந்தியாவின் பசுமைப் புரட்சி நாயகன் எனப் போற்றப்படுகிறார்.
வேளாண் துறையில் சர்வதேச அளவில் புகழ் பெற்றார். சூழலியல் பொருளாதாரத்தின் தந்தை என்றும் ஐக்கிய நாடுகள் சபையால் பாராட்டப்பட்டவர்.
இப்படி பல சாதனைகள் படைத்த அவர், வயது மூப்பு காரணமாக மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதனுக்கு, பாரத பிரதமர் மோடி மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் இரங்கல் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஆளுநர் ரவி அவர்கள், இந்தியப் பசுமைப் புரட்சியின் சிற்பியான மறைந்த டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்குச் சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையில் இன்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதை வழங்கப்பட்டது. 30 குண்டுகள் முழங்க எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு காவல்துறை மரியாதை அளித்தது.
சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. 10 காவலர்கள் 3 முறை வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டு இறுதி மரியாதை செலுத்தினர்.