சிறுமிகள் பலி!- திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்.
Jul 26, 2025, 06:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறுமிகள் பலி!- திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்.

Web Desk by Web Desk
Oct 1, 2023, 01:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சாலைகள் அமைப்பதற்காக, சிக்கண்ண குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், பாதுகாப்பற்ற முறையில், மூடாமல் வைக்கப்பட்டிருந்த குழியில் 2 சிறுமிகள் விழுந்து உயிரிழந்த சம்பவத்திற்குக் காரணமான திமுக அரசுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சாலைகள் அமைப்பதற்காக, சிக்கண்ண குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், 15 அடி ஆழமுள்ள குழி தோண்டி மண் எடுத்துள்ளனர்.

பாதுகாப்பற்ற முறையில், மூடாமல் வைக்கப்பட்டிருந்த இந்தக் குழியில் மழை நீர் தேங்கி, கடந்த 26 செப்டம்பர் 2023 அன்று, 10 மற்றும் 14 வயதுடைய இரண்டு பள்ளிச் சிறுமிகள் நீரில் மூழ்கி இறந்திருக்கின்றனர்.

அதே தினம், திருவள்ளூர் அருகே ஊத்துக்கோட்டையில், அரிசி ஆலை கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி, ஏழு வயது சிறுவனும், அவனது ஆறு வயது சகோதரியும் பலியாகியிருக்கின்றனர்.

அரசுப் பள்ளி வளாகத்தில், 15 அடி ஆழத்திற்கு மணல் அள்ளுவதற்கு, ஒப்பந்ததாரர்களுக்கு, மாவட்ட நிர்வாகமும் பள்ளி நிர்வாகமும் எப்படி அனுமதி கொடுத்தார்கள்? குழிகளை மூடாமல் பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்தது மாவட்ட நிர்வாகத்தின் தோல்வி.

நான்கு உயிர்கள் தமிழக அரசின் கவனக்குறைவால் பறிபோயிருக்கின்றன. அரசுப் பள்ளி வளாகத்தில் மணல் எடுக்க அனுமதி கொடுத்த அதிகாரிகளும், ஒப்பந்ததாரரும் முதல் குற்றவாளிகள். நான்கு இளம் உயிர்கள் பலியான இரண்டு சம்பவங்களிலும் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழக அரசின் மெத்தனப்போக்குக்கு, பிஞ்சு உயிர்கள் பலியாவதா?

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் இந்த நேரத்தில், அரசின் அஜாக்கிரதையால் மேலும் துயரச் சம்பவங்கள் நடைபெறாமல் உடனடியாக அனைத்து மாவட்ட நிர்வாகங்களையும் எச்சரிக்க வேண்டும் என்று, தமிழக அரசை வலியுறுத்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

தமிழக அரசுக்கு வி.ஹெச்.பி. எச்சரிக்கை !!

Next Post

இந்தியா-அமெரிக்கா உறவுகளுக்கு எல்லையே இல்லை: அமைச்சர் ஜெய்சங்கர்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies