குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு, மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தனது எக்ஸ் பக்கத்தில், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் உயிர்கள் பறிபோனது துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Deeply saddened by the loss of lives in a bus accident near Coonoor, Nilgiris. My thoughts are with the bereaved families. May the injured recover at the earliest.- Governor Ravi
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) September 30, 2023
என் எண்ணங்கள் இறந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும் எனப் பதிவிட்டுள்ளார்.