ஜாதீய பதற்றம் - சமூக பாகுபாடுகள் கவலை தருகின்றன - ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!
Aug 25, 2025, 11:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜாதீய பதற்றம் – சமூக பாகுபாடுகள் கவலை தருகின்றன – ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!

Web Desk by Web Desk
Oct 1, 2023, 09:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஜாதீய பதற்றங்கள் மற்றும் சமூக பாகுபாடுகளில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நிலைமை மிகவும் கவலையளிக்கின்றன என மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் செப்டம்பர் 28, 29 ஆகிய இரண்டு அழகான மற்றும் மறக்க முடியாத நாட்களை நான் கழித்தேன்.

விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்கள், ஆசிரியர்கள், தொழில்முனைவோர், மரம் மற்றும் பட்டாசு ஆலைகள், அச்சகங்கள், தீப்பெட்டி தொழிற்சாலைகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், மண்பாண்ட கலைஞர்கள். கைவினைஞர்கள், விஸ்வகர்மாக்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவன சங்கங்கள், சூரிய சக்தி துறை நிறுவன பிரதிநிதிகள், சமூக தலைவர்களை சந்தித்தேன்.

மேலும், அறிவாற்றல் சவால்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள், குடும்பங்களை இழந்தவர்கள் மற்றும் அவர்களுக்காகவே அர்ப்பணித்துள்ள ஆசிரியர்கள் சேவையாற்றும் பார்வையிட்டேன். கல்யாணிபுரம் ஒளவை ஆசிரமத்தை சிவசைலம் கோயிலில் மக்கள் நலனுக்காக வேண்டிக் கொண்டேன். கோவிந்தபேரியில் உள்ள ஸோஹோ கிராமத்தில் ஸோஹோ நிறுவனத்தின்.

தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு அவர்களின் துணிச்சலான, தனித்துவமான மற்றும் நம்பிக்கை தரும் பரிசோதனையாக மனித ஆற்றல் உள்ளிட்ட உள்ளூர் வளங்கள், பாரம்பரிய மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் புதுமையான கலவையைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் விரிவான கிராமப்புற மறுமலர்ச்சியை பார்வையிட்டேன். நமது நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த மாவீரன் பூலித்தேவன், ஒண்டிவீரன், வெண்ணிக்காலாடி ஆகியோருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். தேசியவாத பெருந்தலைவர் காமராஜருக்கு அவரது நினைவு இல்லத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினேன்.

இந்த பயணம் நமது மக்களுக்கு இருக்கும் விருப்பங்கள், மற்றும் கவலைகள் பற்றிய நேரடி அனுபவத்தை எனக்கு வழங்கியது. நமது விவசாயிகள் அழுத்தத்தில் உள்ளபோதும் கூட ஆர்வமுள்ளவர்களாகவும், நமது கைவினைஞர்கள் கடுமையான தடைகளை எதிர்கொண்ட போதும் கூட லட்சியம் மிக்கவர்களாக உள்ளனர்.

சிறு தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்தை விரும்பினாலும், முறைப்படுத்தப்பட்ட தடைகளால் தேங்கியுள்ளன. முக்கிய தொழில்கள் ஒழுங்குமுறை மற்றும் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்கின்றன.

நமது கிராமத்து இளைஞர்கள் இயல்பாகவே அறிவுஜீவிகளாக உள்ளனர். முறையான தகுதிகள் இல்லாவிட்டாலும், அவர்களிடையே சரியான உந்துதலை ஏற்படுத்தினால் ஆக்கபூர்வ மிகுதி மிக்கவர்களாக அவர்களால் திகழ முடியும். அத்தகைய சிலரை ஸோஹோ கிராமத்தில் காணலாம்.

ஜாதிய பதற்றங்கள் மற்றும் சமூக பாகுபாடுகளில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கதைகள் மிகவும் கவலையளிக்கின்றன அவை சமூக நீதி பற்றிய அதிகாரபூர்வ பிரமாண்ட விளம்பரங்களுக்கு முற்றிலும் மாறானவையாக உள்ளன என தெரிவித்துள்ளார்.

Tags: governor ravi
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் மின்சார ரயில்கள் இரத்து – என்ன காரணம்?

Next Post

கர்ம வீரர் காமராஜர் : நினைவு தினம் !

Related News

16வது ஆசிய துப்பாக்கிச் சுடும் போட்டி – பதக்கம் வென்று நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

கிட்னி திருட்டு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

இன்றைய தங்கம் விலை!

திண்டுக்கல் நகரில் நடைபெற்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழக வெள்ளிவிழா மாநாடு – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

5-ம் தலைமுறை போர் விமானம் : பிரான்ஸுடன் கைகோர்க்கும் DRDO – சிறப்பு தொகுப்பு!

உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர் மீது கண்டெய்னர் லாரி மோதல் – 8 பக்தர்கள் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

எம்மதமும் சம்மதம் என்பதே ஹிந்து மதத்தின் நிலைப்பாடு – அண்ணாமலை

மத்திய பிரதேசத்தில் இரு கிராமங்களுக்கு இடையே நடைபெற்ற கல்வீச்சு திருவிழா!

ஸ்பெயினில் அதிக வெப்பம் காரணமாக தீப்பற்றி எரிந்த சோலார் பேனல்கள்!

உ.பி.யில் ஸ்பைடர் மேன் வேடம் அணிந்து எல்லை மீறிய இளைஞர்!

சிம்லாவில் ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்த நபர் – போலீஸ் விசாரணை!

ஜம்மு காஷ்மீரில் கொட்டித் தீர்த்த மழை – சாகர் காட் ஆற்றுப்பாலம் சேதம்!

ராஜஸ்தானில் கனமழையை தொடர்ந்து உருவான புதிய நீர்வீழ்ச்சி!

திருப்பூரில் 100 வயது பாட்டியின் பிறந்த நாள் – 97 பேரன், பேத்திகளுடன் களைகட்டிய கொண்டாட்டம்!

முதல்முறையாக கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயமில்லை – நிதியமைச்சகம் விளக்கம்!

உள்நாட்டு தயாரிப்புகளை வாங்கி பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies