சைபர் வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Jan 14, 2026, 04:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சைபர் வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அவரது உதவியாளரும் குற்றவாளி என அறிவிப்பு: சிக்கலுக்கு மேல் சிக்கல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 2, 2023, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தோஷகானா வழக்கில் சிறையில் இருந்து வரும் நிலையில், அரசு ரகசியங்களை கசிய விட்டதாகத் தொடரப்பட்ட சைபர் வழக்கிலும், அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்திருக்கிறது. இதன் மூலம் இம்ரான் கானுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

2018 முதல் 2022 வரை பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். பிரபல கிரிக்கெட் வீரரான இவர், ஓய்வுக்குப் பிறகு பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியைத் தொடங்கினார். இக்கட்சி 2018 நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றினார். ஆனால், இவரது ஆட்சியில் பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்தது. இதனால், அந்நாட்டு மக்கள் இம்ரான் கான் அரசு மீது கடும் அதிருப்தியடைந்தனர்.

இதையடுத்து, இம்ரான் கானின் கூட்டணியில் இருந்த முக்கியக் கட்சி வெளியேறி, எதிர்கட்சியுடன் கூட்டணி அமைத்தது. இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. இதன் பிறகு எதிர்கட்சி ஆட்சி அமைத்த நிலையில், இம்ரான் கான் மீது மோசடி, ஊழல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், தோஷகானா எனப்படும், அரசுக்குச் சொந்தமான விலை உயர்ந்த பொருட்களை விற்று பண மோசடி செய்த வழக்கில், இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இம்ரான் கான் தற்போது சிறையில் தண்டனையை கழித்து வருகிறார். இதனிடையே, சிறையில் இருந்த இம்ரான் மீது அரசு ரகசியங்களை கசிய விட்டதாக, சைபர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது, கடந்த 2022-ம் ஆண்டு இம்ரான் கான் அரசு கவிழும் சூழல் ஏற்பட்டது. அப்போது, கட்சியின் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இம்ரான், தனது அரசை கவிழ்க்க சதி நடப்பதாகவும், இந்த சதிக்குப் பின்னால் அமெரிக்கா இருப்பதாகவும் கூறியதோடு, அதற்கான ஆதாரமாக அரசின் ரகசியக் கடிதம் ஒன்றையும் காட்டினார்.

இந்த விவகாரம் தொடர்பாக, இம்ரான் கான் மீது அந்நாட்டின் மத்திய புலனாய்வுத்துறை சைபர் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு பாகிஸ்தான் நாட்டின் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில்தான் இம்ரான் கான் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்புக் கூறியிருக்கிறது. இதனால், இம்ரான் கானுக்கு சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

Tags: imran khanCyper caseAccusedCourt announced
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோவில்: 8 மணி நேரம் தரிசனம் ரத்து

Next Post

ஹெப்டத்லான் 800 மீட்டர் : இந்திய வெண்கலம் !

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies