சைபர் வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Aug 21, 2025, 03:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சைபர் வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அவரது உதவியாளரும் குற்றவாளி என அறிவிப்பு: சிக்கலுக்கு மேல் சிக்கல்!

Web Desk by Web Desk
Oct 2, 2023, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தோஷகானா வழக்கில் சிறையில் இருந்து வரும் நிலையில், அரசு ரகசியங்களை கசிய விட்டதாகத் தொடரப்பட்ட சைபர் வழக்கிலும், அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்திருக்கிறது. இதன் மூலம் இம்ரான் கானுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

2018 முதல் 2022 வரை பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். பிரபல கிரிக்கெட் வீரரான இவர், ஓய்வுக்குப் பிறகு பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியைத் தொடங்கினார். இக்கட்சி 2018 நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றினார். ஆனால், இவரது ஆட்சியில் பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்தது. இதனால், அந்நாட்டு மக்கள் இம்ரான் கான் அரசு மீது கடும் அதிருப்தியடைந்தனர்.

இதையடுத்து, இம்ரான் கானின் கூட்டணியில் இருந்த முக்கியக் கட்சி வெளியேறி, எதிர்கட்சியுடன் கூட்டணி அமைத்தது. இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. இதன் பிறகு எதிர்கட்சி ஆட்சி அமைத்த நிலையில், இம்ரான் கான் மீது மோசடி, ஊழல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், தோஷகானா எனப்படும், அரசுக்குச் சொந்தமான விலை உயர்ந்த பொருட்களை விற்று பண மோசடி செய்த வழக்கில், இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இம்ரான் கான் தற்போது சிறையில் தண்டனையை கழித்து வருகிறார். இதனிடையே, சிறையில் இருந்த இம்ரான் மீது அரசு ரகசியங்களை கசிய விட்டதாக, சைபர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது, கடந்த 2022-ம் ஆண்டு இம்ரான் கான் அரசு கவிழும் சூழல் ஏற்பட்டது. அப்போது, கட்சியின் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இம்ரான், தனது அரசை கவிழ்க்க சதி நடப்பதாகவும், இந்த சதிக்குப் பின்னால் அமெரிக்கா இருப்பதாகவும் கூறியதோடு, அதற்கான ஆதாரமாக அரசின் ரகசியக் கடிதம் ஒன்றையும் காட்டினார்.

இந்த விவகாரம் தொடர்பாக, இம்ரான் கான் மீது அந்நாட்டின் மத்திய புலனாய்வுத்துறை சைபர் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு பாகிஸ்தான் நாட்டின் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில்தான் இம்ரான் கான் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்புக் கூறியிருக்கிறது. இதனால், இம்ரான் கானுக்கு சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

Tags: AccusedCourt announcedimran khanCyper case
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோவில்: 8 மணி நேரம் தரிசனம் ரத்து

Next Post

ஹெப்டத்லான் 800 மீட்டர் : இந்திய வெண்கலம் !

Related News

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

Load More

அண்மைச் செய்திகள்

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இருவர் படுகாயம்!

கர்நாடகாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தாக்கல்!

டெல்லி முதலமைச்சருக்கு Z பிரிவு பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies