இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் – 5-வது நாளாக நீடிப்பு
Jul 23, 2025, 11:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் – 5-வது நாளாக நீடிப்பு

Web Desk by Web Desk
Oct 2, 2023, 04:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கிடக் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் 5-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளி கல்வித்துறை, தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றக் கூடிய இடைநிலை ஆசிரியர்களுக்கு, 2009 மே மாதத்திற்கு முன்னால் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஒரு ஊதியமும், அதற்கு பின்னால் பணியில் சேர்ந்தவர்களுக்கு மற்றொரு ஊதியமும் வழங்கப்படுகிறது.

இதனை அடுத்து, சம வேலை செய்யும் எங்களுக்குச் சம ஊதியம் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 28-ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில், இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 5-வது நாளாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டக் களத்தில் இருக்கிற ஆசிரியர்களில் பல ஆசிரியர்களுக்கு உடல் நலப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால், 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆம்புலம்ஸ்கள் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், உடல்நிலைக் குறைவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், போராட்டக் கலத்திலேயே சிகிச்சையானது அளிக்கப்பட்டு வருகின்றது.

இதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதில் எந்த உடன்பாடும் இல்லை என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து சங்க பொதுச்செயலாளர் ராபர்ட் கூறுகையில், இது இன்று நேற்று என்று உருவான பிரச்னை அல்ல, 14 ஆண்டுகளாக நடைபெறும் ஒரு பிரச்சனை. கடந்த 2018 ஆம் ஆண்டு மு.க ஸ்டாலின் அவர்கள் இதே களத்திற்கு வந்து சம வேலைக்குச் சம ஊதியம் நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனே வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாங்கள் எதிர்ப்பார்த்துக் காத்திருந்தோம் . ஆனால் 20 மாதங்கள் ஆகியும் எதுவும் நடக்காததால் கடந்த டிசம்பர் மாதம் நாங்கள் போராட்டத்தைத் தொடங்கினோம்.

இந்த ஆண்டின் முதல் நாள் முதல் அறிவிப்பே இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண் பிரச்சனை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார். ஆனால் 3 மாதங்களில் முடியும் என்று கூறியது இப்பொழுது 10 மாதங்கள் ஆகியும் எங்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் எட்டப்படவில்லை. மீண்டும் எங்களுக்கு இன்று நடந்த பேச்சு வார்த்தையில் எங்களுக்குக் கால அவகாசம் தேவை என்று அறிவித்தார்கள்.

அதற்கு எங்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டது என்னவென்றால் நாங்கள் கால அவகாசம் கொடுப்பதற்குத் தாயாராக இருக்கிறோம். ஆனால் எந்த தேதியிலிருந்து எங்களுக்குச் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கப்படும் என்ற தேதியை அறிக்கையாக வெளியிட்டால் நாங்கள் எங்கள் போராட்டத்தைக் கலைத்துக் கொள்கிறோம்.

மேலும் எண்ணும் எழுத்தும் திட்டத்தைச் சரியாக கற்பிப்பது நீங்கள் தான் என்று எங்களைப் பாராட்டினார்கள். எனவே உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று கூறினார்கள். நாங்களும், எப்பொழுது வேண்டுமானாலும் பணிக்குத் திரும்பத் தயார், எங்கள் கோரிக்கையை எப்பொழுது நிறைவேற்றப்படும் என்ற அறிக்கையை மட்டும் முதல்வர் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags: teacherprotestteachersprotest
ShareTweetSendShare
Previous Post

இன்னொரு பிடி உஷா!

Next Post

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா ?

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies