முடங்கும் அபாயத்தில் இருந்து தப்பியது அமெரிக்கா!
Oct 18, 2025, 06:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முடங்கும் அபாயத்தில் இருந்து தப்பியது அமெரிக்கா!

நிதி ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் உடன்பாடு!

Web Desk by Web Desk
Oct 2, 2023, 04:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் அரசு செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் சபை கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், நள்ளிரவு வரை நடந்த விவாதங்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, முடங்கும் அபாயத்தில் இருந்த அமெரிக்கா தப்பி இருக்கிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, அரசு செலவினங்கள், ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்டவை தொடர்பாக நிதி ஒதுக்கீடு செய்வதற்கு, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும். இதையடுத்து, வரும் நவம்பர் மாதம் வரையிலான செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக ஒப்புதல் பெறுவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது.

இதில், அரசின் செலவினத் திட்டங்களுக்கு செனட் சபை ஒப்புதல் அளித்தது. ஆனால், மக்கள் பிரதிநிதிகள் சபை எதிர்ப்புத் தெரிவித்தது. இந்த சபையில் எதிர்கட்சியான குடியரசுக் கட்சி அதிக பலத்துடன் உள்ளது. எனவே, ரஷ்யா போர் தொடுத்திருக்கும் உக்ரைனுக்கு நிதியுதவி அளிப்பதற்கு, குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எனினும், அக்கட்சியைச் சேர்ந்த சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, அரசு செலவினத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பால் நிதி ஒதுக்கும் மசோதா நிறைவேற முடியாமல் இழுபறி நீடித்தது. அதேசமயம், நேற்று முன்தினம் நள்ளிரவுக்குள் மசோதா நிறைவேறாவிட்டால், அமெரிக்காவே முடங்கும் அபாயத்தில் இருந்தது.

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதிக்கட்ட விவாதங்களுக்குப் பிறகு, நிதி ஒதுக்கும் மசோதா 335:91 என்ற ஆதரவுடன் நிறைவேறியது. ஆனால், உக்ரைனுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம், இச்செலவினத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. இதன் பிறகே, நிதி ஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, இம்மசோதாவில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார். எனினும், திட்டமிடப்பட்டிருந்த நிதியைவிட குறைவான நிதிக்கே தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அரசின் செலவினங்களுக்காகவிரைவில் மீண்டும் மசோதா தாக்கல் செய்ய வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags: Parliamentamerica
ShareTweetSendShare
Previous Post

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா ?

Next Post

பெண்களின் பாதுகாப்பை பா.ஜ.க. உறுதி செய்யும்: பிரதமர் மோடி!

Related News

தீபாவளி பண்டிகை : மக்களின் மனம் கவர்ந்த “மாப்பிள்ளை சம்பா முறுக்கு” – சிறப்பு தொகுப்பு!

ஐப்பசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

தீபாவளி பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை – மகிழ்ச்சியில் திருப்பூர் பனியன் நிறுவன ஊழியர்கள் – சிறப்பு தொகுப்பு!

களைகட்டும் தீபாவளி வியாபாரம் – தங்கம் விலை உயர்வால் கவரிங் விற்பனை அதிகரிப்பு!

ரஷ்ய எண்ணெய் கொள்முதல் நிறுத்தமா? : டிரம்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல – தேர்தல் ஆணையம் பதில்!

Load More

அண்மைச் செய்திகள்

தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

பணி நிரந்தரம் ஆன 2,000 ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 3 மாத ஊதியம் வழங்கப்படாத விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

கரூர் துயரச் சம்பவத்தில் எதை மறைக்கப் பார்க்கிறது திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

கடலூர் அருகே மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

நெல்லையில் ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க கோரி மாகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!

பேரவையில் அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன் தர்ணா!

கோவை ஜி.டி.நாயுடு மேம்பால சாலை பாதுகாப்பை சீர்படுத்த நடவடிக்கை தேவை – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – சென்னை காவல் ஆணையருக்கு நோட்டீஸ்!

ஐப்பசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies