முடங்கும் அபாயத்தில் இருந்து தப்பியது அமெரிக்கா!
Aug 16, 2025, 07:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முடங்கும் அபாயத்தில் இருந்து தப்பியது அமெரிக்கா!

நிதி ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் உடன்பாடு!

Web Desk by Web Desk
Oct 2, 2023, 04:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் அரசு செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் சபை கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், நள்ளிரவு வரை நடந்த விவாதங்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, முடங்கும் அபாயத்தில் இருந்த அமெரிக்கா தப்பி இருக்கிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, அரசு செலவினங்கள், ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்டவை தொடர்பாக நிதி ஒதுக்கீடு செய்வதற்கு, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும். இதையடுத்து, வரும் நவம்பர் மாதம் வரையிலான செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக ஒப்புதல் பெறுவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது.

இதில், அரசின் செலவினத் திட்டங்களுக்கு செனட் சபை ஒப்புதல் அளித்தது. ஆனால், மக்கள் பிரதிநிதிகள் சபை எதிர்ப்புத் தெரிவித்தது. இந்த சபையில் எதிர்கட்சியான குடியரசுக் கட்சி அதிக பலத்துடன் உள்ளது. எனவே, ரஷ்யா போர் தொடுத்திருக்கும் உக்ரைனுக்கு நிதியுதவி அளிப்பதற்கு, குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எனினும், அக்கட்சியைச் சேர்ந்த சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, அரசு செலவினத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பால் நிதி ஒதுக்கும் மசோதா நிறைவேற முடியாமல் இழுபறி நீடித்தது. அதேசமயம், நேற்று முன்தினம் நள்ளிரவுக்குள் மசோதா நிறைவேறாவிட்டால், அமெரிக்காவே முடங்கும் அபாயத்தில் இருந்தது.

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதிக்கட்ட விவாதங்களுக்குப் பிறகு, நிதி ஒதுக்கும் மசோதா 335:91 என்ற ஆதரவுடன் நிறைவேறியது. ஆனால், உக்ரைனுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம், இச்செலவினத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. இதன் பிறகே, நிதி ஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, இம்மசோதாவில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார். எனினும், திட்டமிடப்பட்டிருந்த நிதியைவிட குறைவான நிதிக்கே தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அரசின் செலவினங்களுக்காகவிரைவில் மீண்டும் மசோதா தாக்கல் செய்ய வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags: Parliamentamerica
ShareTweetSendShare
Previous Post

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா ?

Next Post

பெண்களின் பாதுகாப்பை பா.ஜ.க. உறுதி செய்யும்: பிரதமர் மோடி!

Related News

ஆந்திரா : பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

அழிவை நோக்கி பயணிக்கும் மனித குலம்…? : எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அதிர்ச்சி முடிவு!

தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்பு : இந்தியாவுக்கு மேலும் வரியா? நடக்கப்போவது என்ன?

அலாஸ்கா சந்திப்பில் வெற்றி யாருக்கு? – அங்கீகாரம் பெற்ற புதின் – திகைத்து நின்ற ட்ரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

செப்டம்பர் 1ம் தேதி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை உயர்வு!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்!

நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு!

மும்பை : ஆன்லைனில் பால் ஆர்டர் செய்ய முயன்று சுமார் 19 லட்சம் ரூபாயை இழந்த மூதாட்டி!

திருவள்ளூர் : தூய்மை பணியாளரை தாக்கிய செவிலியர் – பணி புறக்கணித்த தூய்மை பணியாளர்கள்!

சியாட்டில் உள்ள விண்வெளி காட்சி முனையில் ஏற்றப்பட்ட இந்தியாவின் மூவர்ணக் கொடி!

அதிபர் புதினை வரவேற்ற அமெரிக்காவின் B-2 , F-22 ரக போர் விமானங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies