கவிழ்க்கும் சதி முறியடிப்பு: தப்பியது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்!
Aug 19, 2025, 05:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கவிழ்க்கும் சதி முறியடிப்பு: தப்பியது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்!

தண்டாவளத்தில் வைக்கப்பட்டிருந்த கற்கள், கம்பிகள் அகற்றம்!

Web Desk by Web Desk
Oct 3, 2023, 06:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உதய்பூர்-ஜெய்ப்பூர் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயிலை கவிழ்க்க நடந்த சதி முறியடிக்கப்பட்டிருக்கிறது. தண்டவாளத்தில் கற்களை வைத்து தடம் புரளச் செய்ய சமூக விரோதிகள் செய்த முயற்சியை, அவசரகால பிரேக்கை பயன்படுத்தி ஓட்டுனர் முறியடித்திருக்கிறார்.

இரயில் பயணத்தை எளிமையாக்கும் வகையில், நாடு முழுவதும் வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது 34 வழித்தடங்களில் வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், உதய்பூர்-ஜெய்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் சமீபத்தில் வடமேற்கு ரயில்வே அஜ்மீர் பிரிவால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இரயிலின் இயக்கத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பர் 24-ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், இந்த இரயில் நேற்று காலை புறப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் உள்ள கங்ரார் மற்றும் சோனியானா இரயில் நிலையங்களுக்கு இடையே காலை 9:53 மணியளவில் வந்துகொண்டிருந்தது. அப்போது, இரயிலை தடம் புரளச் செய்யும் நோக்கில், சமூக விரோதிகள் சிலர் தண்டவாளத்தில் கற்கள் மற்றும் இரும்புக் கம்பிகளை வைத்திருந்தனர். இதை இரயில் இன்ஜின் ஓட்டுனர் கவனித்து விட்டார். இதையடுத்து, அவசர கால பிரேக்கைப் பயன்படுத்தி இரயில் நிறுத்தப்பட்டது.

இதன் மூலம் சமூக விரோதிகளின் சதி முறியடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இரயில்வே ஊழியர்கள் கீழே இறங்கி தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கற்கள் மற்றும் இரும்புக் கம்பிகளை காணொளியாக எடுத்தனர். பின்னர், இதுகுறித்து இரயில்வே பாதுகாப்புப் படை காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வரும் நிலையில், வந்தே பாரத் இரயில் ஊழியர்கள் எடுத்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் குறித்து இரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “இரயில் கங்ராரை கடந்து சென்றபோது, ​​லோகோ பைலட் முபாரக் ஹுசைன், தண்டவாளத்தில் இரும்புக் கம்பிகள் மற்றும் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். இரும்புக் கம்பிகள் ஒவ்வொன்றும் ஒரு அடி நீளம் இருக்கும். உடனே, அவசர கால பிரேக்கை பயன்படுத்தி இரயிலை நிறுத்தி விட்டார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது” என்றார்.

இதுகுறித்து இரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக கங்ரார் ஜி.ஆர்.பி. காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நாசவேலை செயலுக்கு காரணமான குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய விரிவான விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

இதுகுறித்து வடமேற்கு இரயில்வே மண்டலம் வெளியிட்ட அறிக்கையில் , “ஜெய்ப்பூரில் இருந்து உதய்பூர் சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் முன்பு கங்ரார் மற்றும் சோனியானா ரயில் நிலையங்களுக்கு இடையே, சமூக விரோதிகள் இரும்புக் கம்பிகள் மற்றும் கற்களை வைத்து இரயிலை கவிழ்க்க முயன்றனர். இந்த சதி முறியடிக்கப்பட்டிருக்கிறது. மேற்கண்ட சமூக விரோதிகளுக்கு எதிராக இரயில்வே நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

This could have been disastrous !!
Well Planned Derailment of Udaipur – Jaipur Vande Bharat Express near Bhilwara.

When hate towards a particular political party changes into hate towards nation this is the result, God bless people with such mentality#VandeBharatExpress pic.twitter.com/NzkOCtJNNu

— Saurabh • A Railfan 🇮🇳 (@trains_of_india) October 2, 2023

 

Tags: vande bharat expressUdaipurJaipur
ShareTweetSendShare
Previous Post

தமிழக ஆளுநரின் செயலாளராக ஆர்.கிர்லோஷ் குமார் நியமனம்!

Next Post

புதிய ஹேர்ஸ்டைலில் மாஸ் காட்டும் தோனி !

Related News

இபிஎஸ்-க்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் : மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள் கைது!

இந்தோனேசியா : சாம்பலை வெளியேற்றிய லெவோடோபி எரிமலை!

ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை – ஒமர் அப்துல்லா

மகாராஷ்டிராவில் போக்குவரத்து காவலரை 120 மீ தூரம் ஆட்டோவில் இழுத்துச் சென்ற போதை நபர்!

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்ற மாணிகா விஸ்வகர்மா!

Load More

அண்மைச் செய்திகள்

தாமா படத்தின் டீசர் வெளியானது!

நிர்மலா சீதாராமன் – தங்கம் தென்னரசு சந்திப்பு!

உயர்வுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!

தோல் புற்றுநோயால் ஐடி ஊழியர் பாதிப்பு – வெற்றிகரமாக சிகிச்சை அளித்த சென்னை சிம்ஸ் மருத்துவமனை!

முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டம் தொடங்கி வைப்பு!

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies