ஆவின் லாரி விபத்து – 4,000 லிட்டர் பால் வீண்!
Jan 14, 2026, 08:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆவின் லாரி விபத்து – 4,000 லிட்டர் பால் வீண்!

Murugesan M by Murugesan M
Oct 4, 2023, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் அருகே ஆவின் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில், சுமார் 4,000 லிட்டா் பால் வீணாக சாலையில் கொட்டியது.

திருவள்ளூர் அருகே உள்ள காக்களூரில் ஆவின் பால் நிறுவனம் உள்ளது. இன்று அதிகாலை திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள பால் நிலையத்தில் இருந்து காக்களூரில் உள்ள ஆவின் நிறுவனத்திற்கு 7405 லிட்டர் பால் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது. இதை மாதவரத்தைச் சேர்ந்த இலட்சுமணன் என்பவர் ஓட்டி வந்தார்.

இந்த நிலையில், திருவள்ளூர் – ஆவடி சாலையில் உள்ள காக்களூர் தொழிற்பேட்டை அருகே லாரி வந்தபோது, எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க டிரைவர் டேங்கர் லாரியை திருப்பி உள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டேங்கர் லாரியில் இருந்த சுமார் 4,000 லிட்டர் பால் வீணாகச் சாலையில் கொட்டி ஆறாக ஓடியது. இதுகுறித்து ஆவின் நிர்வாகத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த ஆவின் ஊழியர்கள், மற்றொரு டேங்கர் லாரியை வர வழைத்து, விபத்துக்குள்ளான லாரியில் இருந்து, மீதம் இருந்த பாலை மாற்றி ஏற்றி சென்றனர். பின்னர், கிரேன் உதவியுடன் லாரி மீட்கப்பட்டது.

இதுகுறித்து திருவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: aavin lari accident
ShareTweetSendShare
Previous Post

169 நகரங்களில் 10,000 இ – பஸ்கள் – மத்திய அரசு அதிரடி!

Next Post

சென்னை மின்சார இரயில்களில் விரைவில் ஏ.சி. பெட்டிகள்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies