மிகப்பெரிய வீரர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது - ரோஹித் !
Jan 14, 2026, 06:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மிகப்பெரிய வீரர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது – ரோஹித் !

Murugesan M by Murugesan M
Oct 4, 2023, 05:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேவாக், கவுதம் கம்பீர், யுவராஜ் சிங் போன்ற பெரிய வீரர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பு, தனக்கு சரியான நேரத்தில் கிடைத்திருப்பதாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் மிகமுக்கிய வீரராக இருந்தவர் ரோகித் சர்மா. ஆனால் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் அடுத்தடுத்து இரு உலகக்கோப்பைத் தொடரில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா, இம்முறை தலைவராக இந்திய வீரர்களை வழிநடத்தவுள்ளார்.

ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற ரோகித் சர்மா, இம்முறை இந்தியாவுக்காக உலகக்கோப்பையை வெல்வார் என்று இரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

இந்த நிலையில் உலகக்கோப்பைத் தொடரை குறித்தும், தலைமைப் பொறுப்பைக் குறித்தும் ரோகித் சர்மா பேசுகையில், தலைமைப் பொறுப்பு என்பது ஒரு கிரிக்கெட் வீரர் உச்சத்தில் இருக்கும் போது வழங்கப்பட வேண்டும். ஒரு கிரிக்கெட் வீரர் 27 அல்லது 28 வயதில் உச்சக்கட்ட ஃபார்மில் இருப்பார். ஆனால் நாம் நினைத்ததெல்லாம் உடனடியாக நடக்காது. மிகப்பெரிய வீரர்கள் பலருக்கும் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதனால் தனக்கான வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்பதே சரியானது. ஏனென்றால் எனக்கு முன் கேப்டன்சி செய்தது தோனியும், விராட் கோலியும் தான். அவர்கள் இருவரும் சாதாரண வீரர்கள் கிடையாது. இது அனைவருக்கும் தெரியும். அதேபோல் கவுதம் கம்பீர், சேவாக் உள்ளிட்டோருக்கு இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பே கிடைக்கவில்லை. யுவராஜ் சிங்கை நினைத்து பாருங்கள். அவர் ஒருமுறை கூட இந்திய அணியை வழிநடத்தியதில்லை.

இந்திய அணியின் கேப்டனாக யுவராஜ் சிங்கிற்குச் செயல்பட வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அது கடைசி வரை கிடைக்கவில்லை, அதுதான் வாழ்க்கை. எனக்கு இப்போதுக் கிடைத்திருக்கிறது. அதற்காக பெருமைக் கொள்கிறேன். அதேப்போல் எப்படி அணியை வழிநடத்த வேண்டும் என்பது நன்றாக தெரிய வந்த பின், எனக்கு தலைமைப் பொறுப்புக் கொடுக்கப்பட்டது. கேப்டன்சி பற்றி ஏபிசிடி ( ABCD ) கூட தெரியாமல் இருந்த நேரத்திற்கு பதில் இப்போது வழங்கப்பட்டதே சரியானது என்று தெரிவித்துள்ளார்.

Tags: INDIAN CRICKETrohith sharma
ShareTweetSendShare
Previous Post

சந்திரயான் -3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு டாக்டர் பட்டம் – முழு விவரம்

Next Post

காவிரி நீர் ஒழுங்காற்று குழுக்கூட்டம் – 12-ம் தேதி என்ன நடக்கும்?

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies