மிகப்பெரிய வீரர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது - ரோஹித் !
Sep 9, 2025, 12:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மிகப்பெரிய வீரர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது – ரோஹித் !

Web Desk by Web Desk
Oct 4, 2023, 05:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேவாக், கவுதம் கம்பீர், யுவராஜ் சிங் போன்ற பெரிய வீரர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பு, தனக்கு சரியான நேரத்தில் கிடைத்திருப்பதாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் மிகமுக்கிய வீரராக இருந்தவர் ரோகித் சர்மா. ஆனால் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் அடுத்தடுத்து இரு உலகக்கோப்பைத் தொடரில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா, இம்முறை தலைவராக இந்திய வீரர்களை வழிநடத்தவுள்ளார்.

ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற ரோகித் சர்மா, இம்முறை இந்தியாவுக்காக உலகக்கோப்பையை வெல்வார் என்று இரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

இந்த நிலையில் உலகக்கோப்பைத் தொடரை குறித்தும், தலைமைப் பொறுப்பைக் குறித்தும் ரோகித் சர்மா பேசுகையில், தலைமைப் பொறுப்பு என்பது ஒரு கிரிக்கெட் வீரர் உச்சத்தில் இருக்கும் போது வழங்கப்பட வேண்டும். ஒரு கிரிக்கெட் வீரர் 27 அல்லது 28 வயதில் உச்சக்கட்ட ஃபார்மில் இருப்பார். ஆனால் நாம் நினைத்ததெல்லாம் உடனடியாக நடக்காது. மிகப்பெரிய வீரர்கள் பலருக்கும் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதனால் தனக்கான வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்பதே சரியானது. ஏனென்றால் எனக்கு முன் கேப்டன்சி செய்தது தோனியும், விராட் கோலியும் தான். அவர்கள் இருவரும் சாதாரண வீரர்கள் கிடையாது. இது அனைவருக்கும் தெரியும். அதேபோல் கவுதம் கம்பீர், சேவாக் உள்ளிட்டோருக்கு இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பே கிடைக்கவில்லை. யுவராஜ் சிங்கை நினைத்து பாருங்கள். அவர் ஒருமுறை கூட இந்திய அணியை வழிநடத்தியதில்லை.

இந்திய அணியின் கேப்டனாக யுவராஜ் சிங்கிற்குச் செயல்பட வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அது கடைசி வரை கிடைக்கவில்லை, அதுதான் வாழ்க்கை. எனக்கு இப்போதுக் கிடைத்திருக்கிறது. அதற்காக பெருமைக் கொள்கிறேன். அதேப்போல் எப்படி அணியை வழிநடத்த வேண்டும் என்பது நன்றாக தெரிய வந்த பின், எனக்கு தலைமைப் பொறுப்புக் கொடுக்கப்பட்டது. கேப்டன்சி பற்றி ஏபிசிடி ( ABCD ) கூட தெரியாமல் இருந்த நேரத்திற்கு பதில் இப்போது வழங்கப்பட்டதே சரியானது என்று தெரிவித்துள்ளார்.

Tags: INDIAN CRICKETrohith sharma
ShareTweetSendShare
Previous Post

சந்திரயான் -3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு டாக்டர் பட்டம் – முழு விவரம்

Next Post

காவிரி நீர் ஒழுங்காற்று குழுக்கூட்டம் – 12-ம் தேதி என்ன நடக்கும்?

Related News

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

கோவை : உணவுக்கு ரூ.1,473 கட்டணமாக வசூலித்த ஸ்விக்கி நிறுவனம் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெர்மனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா- மர்தானி கேல் தற்காப்பு கலையை நிகழ்த்தி அசத்திய பெண்கள்!

தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. சோதனை – பீகார் இளைஞரிடம் விசாரணை!

நாட்டில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுகின்றன – முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கருத்து!

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கு – 3 பேர் கைது!

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் – நேபாள பிரதமர் உறுதி!

இன்றைய தங்கம் விலை!

குற்றவாளிகளை விடுத்து தற்காத்துக் கொள்வோரை கைது செய்யும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

ராணிப்பேட்டை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 3 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies