குட்டிகளுடன் வலம் வரும் காட்டு யானைகள்: வனத்துறை எச்சரிக்கை!
Aug 18, 2025, 03:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குட்டிகளுடன் வலம் வரும் காட்டு யானைகள்: வனத்துறை எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Oct 4, 2023, 06:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசனூர் பகுதியில் இரண்டு குட்டி யானைகளுடன் சாலையில் உலா வந்த காட்டு யானைகளால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாகச் செல்கிறது. இந்த வனப்பகுதியில், புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி சாலையைக் கடந்து செல்கிறது.

அப்போது, சாலையோரம் உள்ள மரம், செடி, கொடிகளை யானைகள் பறித்து உண்பது வழக்கம். இந்த நிலையில் ஆசனூர் அடுத்த காரப்பள்ளம் என்ற இடத்தில், வனப்பகுதியிலிருந்து 2 குட்டி யானைகளுடன் 2 காட்டு யானைகள், சாலையோரம் நடந்து சென்றன.

இரண்டு குட்டி யானைகள் நடுவில் நடந்து செல்ல, இருபுறமும் இரு யானைகள் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றதை, அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் பார்த்தனர். மேலும், சிலர் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, ஆர்வ மிகுதியால் தங்களது செல்போன்களில், யானைக் கூட்டங்களைப் படம் எடுத்தனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, வனப்பகுதியை விட்டு வெளியேறிய 2 யானைகள் குட்டிகளுடன் சாலையோரம் உலா வருகின்றன.

வாகன ஓட்டிகள் ஆர்வம் மிகுதியால், வாகனங்களைச் சாலையிலேயே நிறுத்திவிட்டு, தங்களது செல்போன்களில் வீடியோவோ, படமோ எடுக்கக் கூடாது. யானைகளைத் தொந்தரவு செய்ய வேண்டாம். யானைகள் தாக்கும் அபாயம் உள்ளதால், இந்த பகுதிகளைக் கடக்கும் போது மிகுந்த கவனமுடன் கடக்க வேண்டும் என்று கூறினர்.

Tags: elephant
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை அணிகளின் விவரம் !

Next Post

மருந்து இறக்குமதி: இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம்!

Related News

திருப்பதி மலை அடிவாரத்தில் கூண்டில் சிக்கிய சிறுத்தை!

திருச்சி : காவலரை வீடியோ எடுத்த உதவி ஆணையர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்!

10.5 % இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ்

தொழிலாளர்கள் மத்தியில் வன்முறை தூண்டும் வகையில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்!

புதுச்சேரி – ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!

ஒரே நாளில் 5 அடி உயர்ந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

மீரட் : சுங்கச்சாவடியில் நிறுத்தாமல் சென்ற சொகுசு கார்!

இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ள பெருசு திரைப்படம்!

தீபாவளி பண்டிகை : முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்!

மாநில கல்விக் கொள்கையில் தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை – அன்புமணி குற்றச்சாட்டு!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

மகாராஷ்டிரா : சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கிய ஜீப்!

‘கூலி யில் நடிக்க சம்பளம் எதுவும் வாங்கவில்லை – அமீர்கான்

ஈரோடு : இல.கணேசன் இரங்கல் கூட்டம் – புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி!

மண்வெட்டியால் மகனை அடித்து கொலை செய்த தாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies