விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் நிதிநிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் ரூ. 15 லட்சம் மோசடி செய்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், பின்கேர் ஸ்மால் பைனான்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில், பிடாரிபட்டியைச் சேர்ந்த புஷ்பராஜ், செஞ்சிப்பேட்டை சுரேஷ் ஆகியோர் மேலாளராக பணியாற்றி வருகிறார்கள். மேலும், பாலகிராமம் குப்புசாமி, நடுநெல்லிமலை மணி உள்ளிட்டோரும் பணியாற்றி வந்தனர்.
இவர்கள் 4 பேரும், வாடிக்கையாளர்களிடம் தவணைத் தொகை வசூல் செய்து தருவது வழக்கம். ஆனால், வசூல் செய்த பணத்தை வங்கியில் கட்டாமல், தங்களது சொந்த செலவுக்குப் பயன்படுத்தி வந்துள்ளனர். இப்படி, அவர்கள் ஏமாற்றியது ரூ.15 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் ஆகும்.
இது தொடர்பாக பைனாஸ் மேலாளர் ராகேஷ் கொடுத்த புகாரின் பேரில், மோசடியில் ஈடுபட்ட புஷ்பராஜ் மற்றும் சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். இதில் தலைமறைவான 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.