காவிரி விவகாரம்: திமுக இரட்டை நிலைப்பாடு - வானதி சீனிவாசன் சரமாரி குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 09:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவிரி விவகாரம்: திமுக இரட்டை நிலைப்பாடு – வானதி சீனிவாசன் சரமாரி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Oct 9, 2023, 05:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள தனித் தீர்மானம், முழுமையானதாக இல்லை என்றும், காவிரி விவகாரத்தில் திமுக அரசு இரட்டை நிலைப்பாடு கொண்டு நாடகம் ஆடுவதாகவும், அதன் காரணமாகவே, தமிழக சட்டப் பேரவையில் இருந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப் பேரவை வளாகத்தில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்வர் கர்நாடகாவுக்குச் செல்கிறார். அங்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டங்களில் கலந்து கொள்கிறார். பேசுகிறார். எனவே, தனது நட்பு, கூட்டணி பலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தமிழகத்துக்குத் தண்ணீர் பெற்றுத்தர முடியவில்லை.

நதிநீர் தாவாக்களின்படி, பாதிக்கப்பட்ட மாநிலங்கள் ஏதுவாக இருந்தாலும், சட்டத்தின்படி அந்த மாநிலத்திற்கான நீரைப் பெற வேண்டும். அதற்காகக் கொண்டுவரப்பட்ட, மசோதா அணை பாதுகாப்பு மசோதா.

நாடாளுமன்றத்தில் அந்த மசோதா தாக்கல் செய்தபோது, மாநில சுயாட்சி என்று கூறி அதை திமுக எதிர்த்தது. ஆனால், தற்போது கர்நாடகாவில் நீரைப் பெற்றத்தர வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதுதான் திமுக அரசின் இரட்டை நிலைப்பாடு.

தமிழகத்தின் நீர் உரிமைக்காக பாஜக என்றும் குரல் கொடுக்கும். கடந்த 5 ஆண்டுகளில், கர்நாடகாவில் பாஜக ஆட்சியிலிருந்த போது இது போன்ற ஒரு சூழல் எழவில்லை. 5 வருட காலம் பாஜக அரசு இருக்கும்போது இதுபோல எந்த பிரச்சினையும் எழவில்லை. ஆனால், காங்கிரஸ் ஆட்சி வந்தவுடனே இது போன்ற பிரச்சினை வருகிறது.

திமுகவும், காங்கிரஸும் பிரதமர் மோடியை எதிர்க்க வேண்டும் என மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கியுள்ளனர். காவிரி நீரைக் கூட பெற்றுத்தர முடியாதவர்கள், பிரதமர் மோடியை எதிர்க்கிறார்கள்? எனவே, மக்களை ஏமாற்றவே இந்த தீர்மானம். எனவே, தமிழக முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் மூலம் நிரந்தர தீர்வு காண முடியாது. எனவே, தமிழகத்தின் உண்மையான நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முழு அக்கறையுடன் சட்டப் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார்.

Tags: bjpvanathi srinivasan bjp
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகத்தை தூள்தூளாக்கிய இஸ்ரேல் விமானப்படை!

Next Post

புழல் சிறையில் மீண்டும் செந்தில் பாலாஜி – நடந்தது என்ன?

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies