அரசு பள்ளியில் இலவச காலை உணவுக்கு ஆசிரியை காசு வாங்கியதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு!
Oct 26, 2025, 12:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு பள்ளியில் இலவச காலை உணவுக்கு ஆசிரியை காசு வாங்கியதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Oct 10, 2023, 03:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குமரி மாவட்ட மாலைக்கோடு அரசு பள்ளியில், தங்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை – இலவச காலை உணவுக்கு கூட ஆசிரியை காசு வாங்கியதாக குற்றச்சாட்டி, பெற்றோர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

குமரி மாவட்டம் மேல்புறத்தை அடுத்த மாலைக்கோடு பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளன. 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர். இந்த அரசு நடுநிலை பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியை – யை கண்டித்து மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இந்த பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியையாக பணிபுரியும் பெல்லா பாய் – காலை உணவு திட்டத்திற்கு மாணவர்களிடமிருந்து நூறு ரூபாய் வசூல் செய்வதாகவும் அதுபோல நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி பிரதிக்ஷா என்ற சிறுமியை – சக மாணவர்கள் முன்னிலையில் அணிந்திருந்த காலணியுடன் காலால் சிறுமியின் முழங்கால் பகுதியில் மிதித்ததாகவும் கூறப்படுகிறது.

மாணவி அழுது கொண்டு வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியதை தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளியில் விசாரிக்க வந்தபோது அப்படி செய்யவில்லை என்று கூறிவிட்டு, வீட்டில் போய் ஏன் சொன்னாய் ? என்று கூறி மாணவியின் காதை காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அதனால் குழந்தையின் பெற்றோர்கள் வட்டார கல்வி அலுவலகத்திற்கும் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும் மனு வழங்கி நீதிக்காக காத்திருந்தனர் .

இதனிடையே இப்பள்ளியில் இரண்டு அரசு ஆசிரியர்களும் ஒரு பி டி ஏ ஆசிரியரும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம் தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் பெல்லா பாய் இப்பள்ளியில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு பி டி ஏ ஆசிரியர் தான் காரணம் அவர்கள் தான் பெற்றோர்களுக்கு மனு வழங்க உதவி புரிகிறார்.

ஆகையால் பள்ளியை விட்டு நீக்குகிறேன் என்று கூறி பிடிஏ ஆசிரியரிடம் இனி நீங்கள் பள்ளிக்கூடம் வர வேண்டாம் என்று கூறி அனைத்து மாணவர்களையும் அழைத்து ஒரு வகுப்பு அறையில் வைத்து பாடம் நடத்தபட்டது.

தகவல் விரைவாக பெற்றோர்கள் மத்தியில் செல்ல, தங்கள் பிள்ளைகளுக்கு இப்பள்ளி பாதுகாப்பில்லை என்று கூறி, முதலில் நான்காம் வகுப்பு மாணவி பிரதிக்ஷாவின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளாக அழைத்து பள்ளியின் முன் பகுதியில் அமர்ந்து எங்கள் பிள்ளையை மிதித்த ஆசிரியரை பணி மாற்றம் செய்யும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்ததை தொடர்ந்து மற்ற பெற்றோர்களும் பள்ளியை முற்றுகையிட்டனர்.

பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து குழித்துறை வட்டார கல்வி அலுவலர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டடு இரு தரப்பினர்களிடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

இதில் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். பேச்சு வார்த்தையில் அனைத்து பெற்றோர்களையும் வரும் 20ஆம் தேதி கூட்டி பிடிஏ கூட்டம் நடத்தப்படும், அதில் சுமூகமான முடிவெடுக்கப்படும் என்றும் தலைமை ஆசிரியராக இருக்கும் பெல்லா பாய் ஆசிரியரை மாற்றி மற்றொரு ஆசிரியரை நியமிப்பதாகவும் வட்டார கல்வி அலுவலர் உறுதி அளித்ததை தொடர்ந்து கூடியிருத்த பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

Tags: primary schoolkanyakumari
ShareTweetSendShare
Previous Post

15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

மணல் குவாரிகளில் மீண்டும் திடீர் சோதனை – அதிரடியில் அமலாக்கத்துறையினர்

Related News

தெலங்கானா : உயிரிழந்த காவலர்களை கௌரவிக்கும் வகையில் நடந்த சைக்கிள் பேரணி!

இந்திய எல்லையில் வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் சீனா!

போரூர்-ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்!

சென்னையில் விசிக கட்சியினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் – புதிய வீடியோ வெளியானது!

மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்!

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் முப்படைகள் கூட்டு ராணுவ பயிற்சி!

Load More

அண்மைச் செய்திகள்

கும்பகோணம் : தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் அவதி!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது – வானிலை ஆய்வு மையம்

இடுக்கி அருகே நிலச்சரவு – ஒருவர் பலி!

வீட்டுக்கு ரூ. 8000 மின்கட்டணம் – கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற திமுக நிர்வாகி!

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – வானதி சீனிவாசன்

விஜய் கரூர் சென்றால் அவரது  உயிருக்கு என்ன பாதுகாப்பு உள்ளது? –  நயினார் நாகேந்திரன் கேள்வி!

வேலூர் அருகே ஏரி கால்வாயில் உடைப்பு – குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!

வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

கனடா பொருள்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி – ட்ரம்ப் உத்தரவு!

பேச்சுவார்ததை தோல்வி அடைந்தால் ஆப்கனுக்கு எதிராக வெளிப்படையான போரை நடத்துவோம் – பாகிஸ்தான் மிரட்டல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies