இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 1,319 பேர்!
Jul 27, 2025, 03:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 1,319 பேர்!

ரூ.3,000 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்டவர்கள்!

Web Desk by Web Desk
Oct 13, 2023, 05:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2023-ம் ஆண்டுக்கான நாட்டின் பணக்காரர்கள் பட்டியலை ஹுருன் இந்தியா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இப்பட்டியலில் நாட்டின் 138 நகரங்களைச் சேர்ந்த 1,319 பணக்காரர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கிறது. இதில் 52 ரியல் எஸ்டேட் டெவலப்பர்களும் அடக்கம் என்பதுதான் ஹைலைட்!

ஹுருன் இந்தியா மற்றும் 360 ஒன் வெல்த் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, நாட்டின் பணக்காரர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, கடந்த 11 ஆண்டுகளாக பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 12-வது ஆண்டாக இந்த ஆண்டும் கணக்கெடுப்பை நடத்தி, ‘360 ஒன் வெல்த் ஹுருன் இந்தியா ரிச் லிஸ்ட் 2023’ என்கிற பெயரில் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. ஆகஸ்ட் 30-ம் தேதி வரை தனிநபர்கள் வைத்திருக்கும் சொத்துக்களின் அடிப்படையில் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. இப்பட்டியலில் நாட்டின் 138 நகரங்களைச் சேர்ந்த 1,319 பணக்காரர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இப்பட்டியலில் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானியை பின்னுக்குத் தள்ளி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 150 பில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவிலுள்ள மற்ற நிறுவனங்களை விட அதிகம். 2014-ம் ஆண்டில் 1,65,100 கோடி ரூபாயாக இருந்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, ஆகஸ்ட் 2023-ம் ஆணடுக்குள் சுமார் 8,08,700 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அதாவது, 4 மடங்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் முகேஷ் அம்பானியின் நெட்வொர்த் 2 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

அதேசமயம், அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 57% குறைந்திருக்கிறது. இதனால் அவர் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். கௌதம் அதானி நெட்வொர்த் 4,74,800 கோடி ரூபாயாகும். இதற்கு ஹிண்டன்பர்க் அறிக்கையின் விளைவாக அதானி குழும நிறுவனப் பங்குகளின் மதிப்பு சரிந்ததே காரணம் என்று கூறப்படுகிறது. அடுத்ததாக, இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் நிறுவனர் சைரஸ் எஸ்.பூனாவாலா, 2,78,500 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 3-வது பணக்காரராக இருக்கிறார்.

மேலும், ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில், ஹெச்.சி.எல். ஷிவ் நாடார் 2,28,900 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 4-வது இடத்திலும், கோபிசந்த் ஹிந்துஜா மற்றும் குடும்பத்தினர் 1,76,500 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 5-வது இடத்திலும், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் மற்றும் தலைவரான திலீப் ஷங்வி 1,64,300 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 6-வது இடத்திலும் உள்ளனர். 1,62,300 கோடி ரூபாய் சொத்துக்களுடன் எல்.என்.மிட்டல் 7-வது இடத்திலும், ராதாகிஷன் தமானி 1,43,900 கோடி ரூபாய் சொத்துக்களுடன் 8-வது இடத்திலும் உள்ளனர். குமார் மங்கலம் பிர்லா & குடும்பம் 1,25,600 கோடி ரூபாய் சொத்துக்களுடன் 9-வது இடத்திலும், நீரஜ் பஜாஜ் & குடும்பத்தினர் 1,20,700 கோடி ரூபாய் சொத்துக்களுடன் 10-வது இடத்திலும் உள்ளனர்.

இப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் 3,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட 1,319 பேரில் 52 பேர் ரியல் எஸ்டேட் துறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பட்டியலில் கடந்த ஓராண்டில் 11 புதிய பெயர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இப்பட்டியலின்படி, ரியல் எஸ்டேட் துறையின் ஒருங்கிணைந்த மதிப்பு 27 சதவீதம் வளர்ச்சி கண்டிருக்கிறது. ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் பட்டியலைப் பொறுத்தவரை, டி.எல்.எஃப்.-ன் ராஜீவ் சிங் மற்றும் அவரது குடும்பம் 78,900 கோடி ரூபாய் சொத்துக்களுடன் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

அடுத்ததாக, மங்கள் பிரபாத் லோதா மற்றும் மேக்ரோடெக் டெவலப்பர்களின் குடும்பம் 52,800 கோடி ரூபாய் சொத்துக்களுடன் 2-வது இடத்திலும், கே ரஹேஜா கார்ப் நிறுவனத்தைச் சேர்ந்த சந்துரு ரஹேஜா குடும்பம் 45,700 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 3-வது இடத்திலும் உள்ளன. பில்லியனர்கள் பட்டியலில் நிதித் தலைநகரான மும்பை முதலிடத்தில் உள்ளது. இந்நகரில் 328 பில்லியனர்கள் வசிக்கின்றனர். டெல்லியில் 199 கோடீஸ்வரர்களும், பெங்களூருவில் 100 கோடீஸ்வரர்களும் வசித்து வருகின்றனர்.

இப்பட்டியல் குறித்து 360 ஒன் நிறுவனத்தின் இணை நிறுவனரும், இணை தலைமை நிர்வாக அதிகாரியுமான யதின் ஷா கூறுகையில், “இந்த 1,319 பேரிடம் தலா 1,000 கோடி ரூபாய் சொத்துகள் இருக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் இவர்களின் சொத்து மதிப்பு 76 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டில் ஒவ்வொரு 3 வாரங்களுக்கும் 2 புதிய கோடீஸ்வரர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது நாட்டில் 259 பில்லியனர்கள் உள்ளனர். இந்த வருடத்தில் 51 பேரின் சொத்து இரட்டிப்பாகி இருக்கிறது” என்று தெரிவித்தார்.

Tags: india rich list-2023360 one wealth hurun
ShareTweetSendShare
Previous Post

சென்னை-குருவாயூர் விரைவு இரயில் சேவையில் மாற்றம்!

Next Post

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு நேர்ந்த வன்கொடுமைகள்!

Related News

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies