ஆபரேஷன் அஜய்: இஸ்ரேலில் இருந்து மேலும் 471 பேர் வருகை!
Mar 15, 2026, 12:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆபரேஷன் அஜய்: இஸ்ரேலில் இருந்து மேலும் 471 பேர் வருகை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 15, 2023, 01:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ், இஸ்ரேலில் இருந்து 3 மற்றும் 4-ம் கட்டமாக மேலும் 471 இந்தியர்கள் தாயகம் திரும்பி இருக்கிறார்கள். இதன் மூலம் இஸ்ரேலில் இருந்து இதுவரை 918 பேர் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேலும் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் இரு தரப்பிலும் 3,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள்.

இதையடுத்து, இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்கிற திட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விமானம் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து இஸ்ரேலின் முக்கிய நகரான டெல் அவிவுக்கு விமானங்களை அனுப்பியது. வெள்ளிக்கிழமை தேசியத் தலைநகர் டெல்லியை வந்தடைந்த முதல் விமானத்தில் 212 இந்தியர்கள் வருகை தந்தனர். தொடர்ந்து சனிக்கிழமை காலை வந்த 2-வது விமானத்தில் 235 பேர் வந்தனர்.

தொடர்ந்து, நேற்று மாலை வந்த 3-வது விமானத்தில்  197 பேர் வருகை தந்தனர். இதைத் தொடர்ந்து இன்று காலை டெல்லியை வந்தடைந்த 4-வது விமானத்தில் 274 பேர் வருகை தந்திருக்கிறார்கள். இதன் மூலம் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து இதுவரை 918 பேர் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள்.

இஸ்ரேல் நாட்டில் மொத்தம் 18,000 இந்தியர்கள் வசிப்பதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் கல்வி, வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு காரணங்களுக்காகச் சென்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களில் இந்தியா திரும்ப விரும்புபவர்கள் மற்றும் தயாராக இருப்பவர்கள் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் தனி விமானத்தில் அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: Operation Ajay4th Flight274 passengers
ShareTweetSendShare
Previous Post

ஜனவரி மத்தியில் ஆதித்யா எல்-1 லாக்ராஞ்ச் புள்ளியை அடையும்!

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆப்கானிஸ்தான் பேட்டிங் !

Related News

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies