ஆபரேஷன் அஜய்: இஸ்ரேலில் இருந்து மேலும் 471 பேர் வருகை!
Jul 29, 2026, 01:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆபரேஷன் அஜய்: இஸ்ரேலில் இருந்து மேலும் 471 பேர் வருகை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 15, 2023, 01:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ், இஸ்ரேலில் இருந்து 3 மற்றும் 4-ம் கட்டமாக மேலும் 471 இந்தியர்கள் தாயகம் திரும்பி இருக்கிறார்கள். இதன் மூலம் இஸ்ரேலில் இருந்து இதுவரை 918 பேர் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேலும் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் இரு தரப்பிலும் 3,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள்.

இதையடுத்து, இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்கிற திட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விமானம் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து இஸ்ரேலின் முக்கிய நகரான டெல் அவிவுக்கு விமானங்களை அனுப்பியது. வெள்ளிக்கிழமை தேசியத் தலைநகர் டெல்லியை வந்தடைந்த முதல் விமானத்தில் 212 இந்தியர்கள் வருகை தந்தனர். தொடர்ந்து சனிக்கிழமை காலை வந்த 2-வது விமானத்தில் 235 பேர் வந்தனர்.

தொடர்ந்து, நேற்று மாலை வந்த 3-வது விமானத்தில்  197 பேர் வருகை தந்தனர். இதைத் தொடர்ந்து இன்று காலை டெல்லியை வந்தடைந்த 4-வது விமானத்தில் 274 பேர் வருகை தந்திருக்கிறார்கள். இதன் மூலம் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து இதுவரை 918 பேர் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள்.

இஸ்ரேல் நாட்டில் மொத்தம் 18,000 இந்தியர்கள் வசிப்பதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் கல்வி, வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு காரணங்களுக்காகச் சென்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களில் இந்தியா திரும்ப விரும்புபவர்கள் மற்றும் தயாராக இருப்பவர்கள் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் தனி விமானத்தில் அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: Operation Ajay4th Flight274 passengers
ShareTweetSendShare
Previous Post

ஜனவரி மத்தியில் ஆதித்யா எல்-1 லாக்ராஞ்ச் புள்ளியை அடையும்!

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆப்கானிஸ்தான் பேட்டிங் !

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies