இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் மற்றொரு முக்கியத் தளபதி "அவுட்"!
Mar 15, 2026, 07:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் மற்றொரு முக்கியத் தளபதி “அவுட்”!

ஹமாஸ் தீவிரவாதிகளின் 100 இலக்குகளும் அழிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 15, 2023, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் மீது கொலைகார ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் முக்கியப் பங்கு வகித்த ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் கடற்படைப் பிரிவின் முக்கியத் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது.

இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி கொலைகாரத் தாக்குதல் நடத்திய காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் சரியான பதிலடி கொடுத்து வருகிறது. முதலில் வான்வழித் தாக்குதலில் மட்டுமே ஈடுபட்டு வந்த இஸ்ரேல் இராணுவம் தற்போது தரைவழித் தாக்குதலையும் நடத்தி வருகிறது. எல்லையில் அணிவகுத்து நிற்கும் பீரங்கிகளும், டாங்கிகளும் காஸாவை நோக்கி குண்டுகளை வீசி வருகின்றன. மேலும், காஸா நகருக்குள் ஊடுருவிய இஸ்ரேல் தரைப்படை வீரர்களும், ஹமாஸ் தீவிரவாதிகளை குறிவைத்து சுட்டுக் கொல்வதோடு, பலரையும் கைது செய்திருக்கிறார்கள்.

இஸ்ரேலின் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஏற்கெனவே, விமானப்படைத் தலைவர் முராத் அபு முராத் கொல்லப்பட்டார். தொடர்ந்து, மற்றொரு ட்ரோன் தாக்குதலில் முக்கிய கமாண்டோ பிரிவான நுக்பா பிரிவின் தளபதி அலி காடி கொல்லப்பட்டார். மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் இஸ்ரேல் விமானப்படையின் குண்டு வீச்சில் தூள் தூளானது. அதேபோல, முக்கியத் தலைவர் ஒருவரின் வீடு, மசூதியில் மையப் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம் ஆகியவற்றையும் இஸ்ரேல் விமானப்படை தரைமட்டமாக்கியது.

இந்த நிலையில்தான், இஸ்ரேல் விமானப்படையின் வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் கடற்படைப் பிரிவின் முக்கியத் தளபதி பிலால் அல் கெத்ரா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. இவர்தான் ஹமாஸ் தீவிரவாதிகளின் கொலைகாரத் தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய மூத்த தளபதி என்றும், நுக்பா பிரிவின் தெற்கு கான் யூனிஸ் பட்டாலியனின் நாகாபா படைப் பிரிவுக்கு தலைமை வகித்தவர் என்றும், இஸ்ரேலின் தெற்கு பகுதிகளான நிரிம் மற்றும் நிர் ஓஸ் மீது தாக்குதல் நடத்தியவர் என்றும் கூறியிருக்கிறது.

இதுதவிர, காஸா பகுதியில் நேற்று இரவு முழுவதும் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் தீவிரவாதிகளின் கட்டளை மையங்கள், இராணுவ வளாகங்கள், டஜன் கணக்கான ராக்கெட் ஏவுகணைகள், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கண்காணிப்பு நிலைகள் உட்பட 100-க்கணக்கான இலக்குகளையும் அழித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் ஷின் பெட் பாதுகாப்பு நிறுவனம், இராணுவ புலனாய்வு இயக்குனரகத்தின் உளவுப்பிரிவு ஆகியவை காஸா நகருக்குள் ஊசடுருவி இருக்கிறது. இவர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையிலேயே இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி, ஹமாஸ் தீவிரவாதிகளின் இலக்குகளை அழித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: IsraelairstrikeEliminateHamas Commander
ShareTweetSendShare
Previous Post

ராமர் கோவிலில் தமிழக ஆதினங்கள்…!

Next Post

கே.எல். ராகுலுக்கு தங்க பதக்கம் !

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies