ககன்யான் திட்டம்: அக்டோபர் 21-ல் முதல்கட்ட சோதனை!
Mar 15, 2026, 05:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ககன்யான் திட்டம்: அக்டோபர் 21-ல் முதல்கட்ட சோதனை!

தயார் நிலையில் சோதனை விமானம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 16, 2023, 06:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரோ தனது லட்சிய மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டத்தின் சோதனை விமானத்தை அக்டோபர் 21-ம் தேதி காலை 7 முதல் 9 மணிக்குள் ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்திலிருந்து ஏவ திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியதைத் தொடர்ந்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தை கடந்த செப்டம்பர் மாதம் 2-ம் தேதி விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலமும் தனது இலக்கை நோக்கி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக, மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை இஸ்ரோ கையில் எடுத்திருக்கிறது. இத்திட்டத்தின் முக்கியப் பகுதியாக வரும் அக்டோபர் 21-ம் தேதி காலை 7 மணி முதல் 9 மணி வரை ககன்யான் சோதனை விமானத்தை விண்ணில் செலுத்த முடிவு செய்திருக்கிறது.

இதுகுறித்து இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “ககன்யான் முதல்கட்ட சோதனைக்கு எல்லாம் தயார் நிலையில் உள்ளன. அக்டோபர் 21-ம் தேதி காலை 7 முதல் 9 மணிக்குள் ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்திலிருந்து ககன்யான் திட்டத்தின் சோதனை விமானம் விண்வெளியில் செலுத்தப்படும்” என்று தெரிவித்திருக்கிறது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை இஸ்ரோ கடந்த 2007-ம் ஆண்டு 10,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தொடங்கியது. இத்திட்டத்துக்கு கடந்த 2014-ல் ககன்யான் என்று பெயரிடப்பட்டது. இதன் பிறகு, ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. பூமியிலிருந்து 400 கி.மீ. தொலைவு சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 3 பேர் கொண்ட விண்வெளி வீரர் குழுவினரை அனுப்பி 1 முதல் 3 நாட்கள் வரையிலான ஆய்வுக்குப் பிறகு பத்திரமாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதுதான் ககன்யான் திட்டத்தின் நோக்கம்.

இந்த சோதனை வாகனம் என்பது ககன்யான் மிஷனுக்காக உருவாக்கப்பட்ட ஒற்றை நிலை திரவ ராக்கெட்டாகும். இதன் பேலோடுகளில் க்ரூ மாட்யூல் மற்றும் க்ரூ எஸ்கேப் சிஸ்டம்ஸ் ஆகியவை அடங்கும். இச்சோதனையானது ககன்யான் திட்டத்துக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும். மேலும், இந்த சோதனை விமானத்தின் வெற்றி, மீதமுள்ள தகுதிச் சோதனைகள் மற்றும் ஆளில்லா பயணங்களுக்கு களம் அமைக்கும். இது இந்திய விண்வெளி வீரர்களுடன் முதல் ககன்யான் பயணத்திற்கு வழிவகுக்கும்.

இத்திட்டம் வெற்றிபெற்றால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 4-வது நாடாக இந்தியா உருவெடுக்கும். இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Mission Gaganyaan:
The TV-D1 test flight is scheduled for
🗓️October 21, 2023
🕛between 7 am and 9 am
🚩from SDSC-SHAR, Sriharikota #Gaganyaan pic.twitter.com/7NbMC4YdYD

— ISRO (@isro) October 16, 2023

 

Tags: flightgaganyaantest vehiclescheduled
ShareTweetSendShare
Previous Post

ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் கிரிக்கெட் : ரசிகர்கள் உற்சாகம்!

Next Post

தெய்வலோகமாக காட்சி தந்த வடபழனி ஆண்டவர் ஆலயம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies