தமிழகத்தில் 3 திட்டங்களில் போலி பயனாளிகள் - நாராயணன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Nov 15, 2025, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் 3 திட்டங்களில் போலி பயனாளிகள் – நாராயணன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Web Desk by Web Desk
Oct 17, 2023, 06:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் 3 திட்டங்களில் போலி பயனாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.

உர மானியம், விவசாயிகள் கௌரவ நிதி, நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டம் ஆகிய திட்டங்களை மாநில அரசுகள் பயனாளிகளை அடையாளம் கண்டு செயல்படுத்தும் போது, பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதையடுத்து, போலி பயனாளிகளை அடையாளம் காணும் பெரும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளதோடு, இந்த திட்டங்களைச் செயல்படுத்தும் மாநில அரசுகளையும் முடுக்கி விட்டுள்ளது.

விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் மட்டுமே பல்வேறு மாநிலங்களில் இது வரை 1 கோடியே, 71 லட்சம் போலி மற்றும் தகுதியில்லாத பயனாளிகள் விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வருடம் மட்டும் தவறான, தகுதியற்ற நபர்களுக்குச் செல்லவிருந்த ரூபாய் 9000 கோடி தடுக்கப்பட்டு, சரியான தகுதி வாய்ந்த நபர்களை அடையாளம் கண்டு வழங்கப்படும்.

மத்திய அரசால் வழங்கப்படும் மானியமாக வழங்கப்படும் உரம் விவசாய தேவைகளுக்கு இல்லாமல், தவறாகத் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தப்படுவதை மத்திய அரசின் சோதனைக்குக்கள் கண்டுபிடித்துள்ளன. இதன் மூலம் இந்த ஆண்டு மட்டும் ரூபாய் 5000 கோடி சேமிக்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.

இதே போல், நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்திலும் போலி பயனாளிகள் மற்றும் தகுதி பெறாத பயனாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த நிதியாண்டில் மட்டும் போலி பயனாளிகளுக்குச் செல்லவிருந்த ரூபாய் 4000 கோடி சேமிக்கப்பட்டு, உரிய, தேவையான பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

ஆக மொத்தம் இந்த மூன்று திட்டங்களில் மட்டும் ரூபாய் 18,000 கோடி மக்கள் பணம் போலி பயனாளிகள் வசம் செல்லாமல் சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அரசுகள் மத்திய அரசோடு இணைந்து பணியாற்றுவதன் மூலம் மட்டுமே இது போன்ற முறைகேடுகளைத் தடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களில் போலி பயனாளிகள் என்ற குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: narayanan tiruppathi
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் சிபிஐ அதிகாரிகள் – என்ன காரணம்?

Next Post

சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் கிடைக்குமா?

Related News

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies