தமிழகத்தில் 3 திட்டங்களில் போலி பயனாளிகள் - நாராயணன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Jan 14, 2026, 09:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் 3 திட்டங்களில் போலி பயனாளிகள் – நாராயணன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Murugesan M by Murugesan M
Oct 17, 2023, 06:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் 3 திட்டங்களில் போலி பயனாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.

உர மானியம், விவசாயிகள் கௌரவ நிதி, நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டம் ஆகிய திட்டங்களை மாநில அரசுகள் பயனாளிகளை அடையாளம் கண்டு செயல்படுத்தும் போது, பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதையடுத்து, போலி பயனாளிகளை அடையாளம் காணும் பெரும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளதோடு, இந்த திட்டங்களைச் செயல்படுத்தும் மாநில அரசுகளையும் முடுக்கி விட்டுள்ளது.

விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் மட்டுமே பல்வேறு மாநிலங்களில் இது வரை 1 கோடியே, 71 லட்சம் போலி மற்றும் தகுதியில்லாத பயனாளிகள் விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வருடம் மட்டும் தவறான, தகுதியற்ற நபர்களுக்குச் செல்லவிருந்த ரூபாய் 9000 கோடி தடுக்கப்பட்டு, சரியான தகுதி வாய்ந்த நபர்களை அடையாளம் கண்டு வழங்கப்படும்.

மத்திய அரசால் வழங்கப்படும் மானியமாக வழங்கப்படும் உரம் விவசாய தேவைகளுக்கு இல்லாமல், தவறாகத் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தப்படுவதை மத்திய அரசின் சோதனைக்குக்கள் கண்டுபிடித்துள்ளன. இதன் மூலம் இந்த ஆண்டு மட்டும் ரூபாய் 5000 கோடி சேமிக்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.

இதே போல், நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்திலும் போலி பயனாளிகள் மற்றும் தகுதி பெறாத பயனாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த நிதியாண்டில் மட்டும் போலி பயனாளிகளுக்குச் செல்லவிருந்த ரூபாய் 4000 கோடி சேமிக்கப்பட்டு, உரிய, தேவையான பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

ஆக மொத்தம் இந்த மூன்று திட்டங்களில் மட்டும் ரூபாய் 18,000 கோடி மக்கள் பணம் போலி பயனாளிகள் வசம் செல்லாமல் சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அரசுகள் மத்திய அரசோடு இணைந்து பணியாற்றுவதன் மூலம் மட்டுமே இது போன்ற முறைகேடுகளைத் தடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களில் போலி பயனாளிகள் என்ற குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: narayanan tiruppathi
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் சிபிஐ அதிகாரிகள் – என்ன காரணம்?

Next Post

சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் கிடைக்குமா?

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies