லடாக்கில் மெகா பவர் டிரான்ஸ்மிஷன் லைனுக்கு ரூ.20,774 கோடி: மத்திய அரசு ஒப்புதல்!
Sep 10, 2025, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லடாக்கில் மெகா பவர் டிரான்ஸ்மிஷன் லைனுக்கு ரூ.20,774 கோடி: மத்திய அரசு ஒப்புதல்!

Web Desk by Web Desk
Oct 18, 2023, 08:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லடாக்கில் உள்ள 13 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தில் இருந்து, ஹரியானாவில் உள்ள கைதாலுக்கு சூரிய சக்தியை கொண்டு செல்வதற்காக 20,773.70 கோடி ரூபாயில் டிரான்ஸ்மிஷன் லைன் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்திருக்கிறது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி நடந்த சுதந்திர தின உரையின்போது, ​​லடாக்கில் 7.5 ஜிகாவாட் சோலார் பார்க் அமைப்பதாக அறிவித்தார். அதன்படி, விரிவான கள ஆய்வுக்குப் பிறகு, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் 13 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறனையும், 12 ஜிகாவாட் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பையும் லடாக் யூனியன் பிரதேசமான பாங்கில் அமைக்கும் திட்டத்தைத் தயாரித்திருக்கிறது.

இங்கு தயாரிக்கப்படும் மிகப்பெரிய அளவிலான மின்சாரத்தை, இதர மாநிலங்களுக்குக் கொண்டு செல்லும் வகையில், மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற உள்கட்டமைப்பை உருவாக்குவது அவசியம். இந்த சூழலில், லடாக்கில் 13 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கான பசுமை எரிசக்தி காரிடார் 2-வது கட்டம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற அமைப்பு திட்டத்திற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறது.

இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், “இத்திட்டம் 2029-30-ம் நிதியாண்டுக்குள் மொத்தம் 20,773.70 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 40 சதவீத மத்திய நிதியுதவியுடன் 8,309.48 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இத்திட்டம் மார்ச் 2025-க்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சாரத்தை வெளியேற்றுவதற்கான டிரான்ஸ்மிஷன் லைன் ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் வழியாக ஹரியானாவில் உள்ள கைதால் வரை செல்லும். அங்கு அது தேசிய கட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும். அதேசமயம், லடாக்கிற்கு நம்பகமான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்காக, லேயில் உள்ள திட்டத்தில் இருந்து தற்போதுள்ள லடாக் கட்டத்திற்கு ஒரு இடை இணைப்பும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

இது ஜம்மு காஷ்மீருக்கு மின்சாரம் வழங்க லே-அலுஸ்டெங்-ஸ்ரீநகர் வழித்தடத்துடன் இணைக்கப்படும். இத்திட்டமானது பாங் (லடாக்) மற்றும் கைத்தால் (ஹரியானா) ஆகிய இடங்களில் தலா 713 கி.மீ. டிரான்ஸ்மிஷன் லைன்களையும் (480 கி.மீ. எச்.வி.டி.சி. லைன் உட்பட) மற்றும் 5 ஜிகாவாட் திறன் கொண்ட எச்.வி.டி.சி. முனையமும் அமைக்கப்படும்.

இத்திட்டம் 2030-ம் ஆண்டிற்குள் புதைபடிவமற்ற எரிபொருட்களிலிருந்து 500 ஜிகாவாட் நிறுவப்பட்ட மின்சாரத் திறனை அடையும் இலக்கை அடைய பங்களிக்கும். மேலும், இத்திட்டம் மின்சாரம் மற்றும் பிற தொடர்புடைய துறைகளில், குறிப்பாக லடாக் பிராந்தியத்தில் பெரிய நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்” என்றார்.

இத்திட்டம், சராசரி கடல் மட்டத்திலிருந்து 4,700 மீட்டர் உயரத்தில் கட்டுமானப் பணிகள் மற்றும் -35 டிகிரி செல்சியஸுக்குக் குறைவான சுற்றுப்புற வெப்பநிலை, குறைந்த காற்றின் அடர்த்தி மற்றும் மிகக் குறைந்த வளிமண்டல ஆக்ஸிஜன் அளவுகள் ஆகியவற்றில் டிரான்ஸ்மிஷன் லைன் அமைப்பது பெரும் சவாலாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Tags: LadakhCentre approvesPower Transmission Line
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

Next Post

நாளை ரிலீசாகிறது விஜய் நடித்த லியோ!

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies