லடாக்கில் மெகா பவர் டிரான்ஸ்மிஷன் லைனுக்கு ரூ.20,774 கோடி: மத்திய அரசு ஒப்புதல்!
Jul 29, 2026, 12:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லடாக்கில் மெகா பவர் டிரான்ஸ்மிஷன் லைனுக்கு ரூ.20,774 கோடி: மத்திய அரசு ஒப்புதல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 18, 2023, 08:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லடாக்கில் உள்ள 13 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தில் இருந்து, ஹரியானாவில் உள்ள கைதாலுக்கு சூரிய சக்தியை கொண்டு செல்வதற்காக 20,773.70 கோடி ரூபாயில் டிரான்ஸ்மிஷன் லைன் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்திருக்கிறது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி நடந்த சுதந்திர தின உரையின்போது, ​​லடாக்கில் 7.5 ஜிகாவாட் சோலார் பார்க் அமைப்பதாக அறிவித்தார். அதன்படி, விரிவான கள ஆய்வுக்குப் பிறகு, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் 13 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறனையும், 12 ஜிகாவாட் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பையும் லடாக் யூனியன் பிரதேசமான பாங்கில் அமைக்கும் திட்டத்தைத் தயாரித்திருக்கிறது.

இங்கு தயாரிக்கப்படும் மிகப்பெரிய அளவிலான மின்சாரத்தை, இதர மாநிலங்களுக்குக் கொண்டு செல்லும் வகையில், மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற உள்கட்டமைப்பை உருவாக்குவது அவசியம். இந்த சூழலில், லடாக்கில் 13 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கான பசுமை எரிசக்தி காரிடார் 2-வது கட்டம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற அமைப்பு திட்டத்திற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறது.

இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், “இத்திட்டம் 2029-30-ம் நிதியாண்டுக்குள் மொத்தம் 20,773.70 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 40 சதவீத மத்திய நிதியுதவியுடன் 8,309.48 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இத்திட்டம் மார்ச் 2025-க்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சாரத்தை வெளியேற்றுவதற்கான டிரான்ஸ்மிஷன் லைன் ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் வழியாக ஹரியானாவில் உள்ள கைதால் வரை செல்லும். அங்கு அது தேசிய கட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும். அதேசமயம், லடாக்கிற்கு நம்பகமான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்காக, லேயில் உள்ள திட்டத்தில் இருந்து தற்போதுள்ள லடாக் கட்டத்திற்கு ஒரு இடை இணைப்பும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

இது ஜம்மு காஷ்மீருக்கு மின்சாரம் வழங்க லே-அலுஸ்டெங்-ஸ்ரீநகர் வழித்தடத்துடன் இணைக்கப்படும். இத்திட்டமானது பாங் (லடாக்) மற்றும் கைத்தால் (ஹரியானா) ஆகிய இடங்களில் தலா 713 கி.மீ. டிரான்ஸ்மிஷன் லைன்களையும் (480 கி.மீ. எச்.வி.டி.சி. லைன் உட்பட) மற்றும் 5 ஜிகாவாட் திறன் கொண்ட எச்.வி.டி.சி. முனையமும் அமைக்கப்படும்.

இத்திட்டம் 2030-ம் ஆண்டிற்குள் புதைபடிவமற்ற எரிபொருட்களிலிருந்து 500 ஜிகாவாட் நிறுவப்பட்ட மின்சாரத் திறனை அடையும் இலக்கை அடைய பங்களிக்கும். மேலும், இத்திட்டம் மின்சாரம் மற்றும் பிற தொடர்புடைய துறைகளில், குறிப்பாக லடாக் பிராந்தியத்தில் பெரிய நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்” என்றார்.

இத்திட்டம், சராசரி கடல் மட்டத்திலிருந்து 4,700 மீட்டர் உயரத்தில் கட்டுமானப் பணிகள் மற்றும் -35 டிகிரி செல்சியஸுக்குக் குறைவான சுற்றுப்புற வெப்பநிலை, குறைந்த காற்றின் அடர்த்தி மற்றும் மிகக் குறைந்த வளிமண்டல ஆக்ஸிஜன் அளவுகள் ஆகியவற்றில் டிரான்ஸ்மிஷன் லைன் அமைப்பது பெரும் சவாலாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Tags: LadakhCentre approvesPower Transmission Line
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

Next Post

நாளை ரிலீசாகிறது விஜய் நடித்த லியோ!

Related News

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies