ஊழல் காங்கிரஸால் ஏமாற்றப்பட்டதாக மக்கள் உணர்கிறார்கள்: ஜெ.பி.நட்டா!
Jul 26, 2025, 11:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல் காங்கிரஸால் ஏமாற்றப்பட்டதாக மக்கள் உணர்கிறார்கள்: ஜெ.பி.நட்டா!

Web Desk by Web Desk
Oct 18, 2023, 08:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழலில் திளைத்துள்ள காங்கிரஸ் அரசால் ஏமாற்றப்பட்டதாக ராஜஸ்தான் மக்கள் உணர்கிறார்கள். ஆகவே, மாநிலத்தில் பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்துக்குச் சென்றிருக்கும் பா.ஜ.க. தேசியத் தலைவர் நட்டா, பூண்டி மற்றும் ஜலவர் பகுதிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த கோட்டாவுக்கு வந்தார். கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த நட்டா, “ராஜஸ்தானில் தினமும் பெண்களுக்கு எதிராக 17 பலாத்கார சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

15,000-க்கும் மேற்பட்ட பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. குற்றச் சம்பவங்கள் தரவுப்படி, ராஜஸ்தான் மாநிலம் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகம் நடக்கும் இடத்தில் முதலிடத்தில் இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், விவசாயிகள், இளைஞர்களுக்கு எதிரான துரோகங்கள் அதிகரித்து வருகின்றன.

மேலும், ராஜஸ்தான் மக்கள் ஆளும் ஊழல் காங்கிரஸ் கட்சியால் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இந்த ஊழல்வாதிகளை ஒழிக்க மக்கள் முடிவு செய்து விட்டனர். மாநிலத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ஊழல் காங்கிரஸ் அரசை அகற்ற மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.

பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று உறுதி பூண்டிருக்கிறார்கள். எங்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் காணும் உற்சாகத்தைப் பார்க்கும்போது, ராஜஸ்தான் மக்கள் பா.ஜ.க.வை நோக்கித் தங்களது மனதை திருப்பி இருப்பதை தெளிவாகக் காட்டுகிறது. ஊழல், விவசாயக் கடன் தள்ளுபடி, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என காங்கிரஸ் அரசால் ராஜஸ்தான் மக்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன்.

காங்கிரஸ் ஆட்சியின்போது 19,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்கள் ஏலம் விடப்பட்டது. ‘சிவப்பு டைரி’ குறித்த காங்கிரஸ் தலைவர்களின் அறிக்கைகள் அவர்களின் அவநம்பிக்கையை காட்டுகிறது. மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பெரும் உற்சாகமான சூழல் நிலவுகிறது. வரும் தேர்தலில் கோட்டா மாவடத்தில் உள்ள 17 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும்” என்றார்.

Tags: RajasthanJ.P.Nadda
ShareTweetSendShare
Previous Post

சென்னிமலை விவகாரம்! கிறிஸ்துவ முன்னணி தலைவர் ஜோசப் கைது!

Next Post

ஜெகத்ரட்சகன், மது ஆலை தொடர்பான கணக்குகளில் ரூ.500 கோடிவரி ஏய்ப்பு! – வருமானவரித்துறை.

Related News

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

சென்னை : இறுதி ஊர்வலத்தின் போது நாட்டு வெடி வெடித்து மாணவி படுகாயம்!

திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் போலீசார் அனுமதி வழங்குவதில்லை : இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு!

நாட்டை காக்க வீர மரணமடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூர்வோம் – நயினார் நாகேந்திரன்

மியான்மர் : கனமழையால் திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் – மக்கள் அவதி!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – இளைஞரின் புகைப்படம் வெளியீடு!

ராஜகோபுரம் எதிரில் உள்ள சக்கரை குளம் குடிகாரர்களின் கூடாரமாக மாறி உள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி!

ரிதன்யா வழக்கு – ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க ஆணை!

யூடியூப், இன்ஸ்டாவுக்கு செக் வைத்த மஸ்க் : 9 ஆண்டுக்குப் பின் மீண்டு(ம்) வருகிறது VINE!

18,000 அடி உயரத்தில் சரித்திர வெற்றி : கார்கில் போர் – 26வது வெற்றி தினம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies