ஊழல் காங்கிரஸால் ஏமாற்றப்பட்டதாக மக்கள் உணர்கிறார்கள்: ஜெ.பி.நட்டா!
Jan 14, 2026, 08:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல் காங்கிரஸால் ஏமாற்றப்பட்டதாக மக்கள் உணர்கிறார்கள்: ஜெ.பி.நட்டா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 18, 2023, 08:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழலில் திளைத்துள்ள காங்கிரஸ் அரசால் ஏமாற்றப்பட்டதாக ராஜஸ்தான் மக்கள் உணர்கிறார்கள். ஆகவே, மாநிலத்தில் பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்துக்குச் சென்றிருக்கும் பா.ஜ.க. தேசியத் தலைவர் நட்டா, பூண்டி மற்றும் ஜலவர் பகுதிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த கோட்டாவுக்கு வந்தார். கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த நட்டா, “ராஜஸ்தானில் தினமும் பெண்களுக்கு எதிராக 17 பலாத்கார சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

15,000-க்கும் மேற்பட்ட பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. குற்றச் சம்பவங்கள் தரவுப்படி, ராஜஸ்தான் மாநிலம் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகம் நடக்கும் இடத்தில் முதலிடத்தில் இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், விவசாயிகள், இளைஞர்களுக்கு எதிரான துரோகங்கள் அதிகரித்து வருகின்றன.

மேலும், ராஜஸ்தான் மக்கள் ஆளும் ஊழல் காங்கிரஸ் கட்சியால் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இந்த ஊழல்வாதிகளை ஒழிக்க மக்கள் முடிவு செய்து விட்டனர். மாநிலத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ஊழல் காங்கிரஸ் அரசை அகற்ற மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.

பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று உறுதி பூண்டிருக்கிறார்கள். எங்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் காணும் உற்சாகத்தைப் பார்க்கும்போது, ராஜஸ்தான் மக்கள் பா.ஜ.க.வை நோக்கித் தங்களது மனதை திருப்பி இருப்பதை தெளிவாகக் காட்டுகிறது. ஊழல், விவசாயக் கடன் தள்ளுபடி, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என காங்கிரஸ் அரசால் ராஜஸ்தான் மக்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன்.

காங்கிரஸ் ஆட்சியின்போது 19,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்கள் ஏலம் விடப்பட்டது. ‘சிவப்பு டைரி’ குறித்த காங்கிரஸ் தலைவர்களின் அறிக்கைகள் அவர்களின் அவநம்பிக்கையை காட்டுகிறது. மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பெரும் உற்சாகமான சூழல் நிலவுகிறது. வரும் தேர்தலில் கோட்டா மாவடத்தில் உள்ள 17 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும்” என்றார்.

Tags: RajasthanJ.P.Nadda
ShareTweetSendShare
Previous Post

சென்னிமலை விவகாரம்! கிறிஸ்துவ முன்னணி தலைவர் ஜோசப் கைது!

Next Post

ஜெகத்ரட்சகன், மது ஆலை தொடர்பான கணக்குகளில் ரூ.500 கோடிவரி ஏய்ப்பு! – வருமானவரித்துறை.

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies