ஊழல் காங்கிரஸால் ஏமாற்றப்பட்டதாக மக்கள் உணர்கிறார்கள்: ஜெ.பி.நட்டா!
Sep 10, 2025, 06:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல் காங்கிரஸால் ஏமாற்றப்பட்டதாக மக்கள் உணர்கிறார்கள்: ஜெ.பி.நட்டா!

Web Desk by Web Desk
Oct 18, 2023, 08:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழலில் திளைத்துள்ள காங்கிரஸ் அரசால் ஏமாற்றப்பட்டதாக ராஜஸ்தான் மக்கள் உணர்கிறார்கள். ஆகவே, மாநிலத்தில் பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்துக்குச் சென்றிருக்கும் பா.ஜ.க. தேசியத் தலைவர் நட்டா, பூண்டி மற்றும் ஜலவர் பகுதிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த கோட்டாவுக்கு வந்தார். கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த நட்டா, “ராஜஸ்தானில் தினமும் பெண்களுக்கு எதிராக 17 பலாத்கார சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

15,000-க்கும் மேற்பட்ட பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. குற்றச் சம்பவங்கள் தரவுப்படி, ராஜஸ்தான் மாநிலம் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகம் நடக்கும் இடத்தில் முதலிடத்தில் இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், விவசாயிகள், இளைஞர்களுக்கு எதிரான துரோகங்கள் அதிகரித்து வருகின்றன.

மேலும், ராஜஸ்தான் மக்கள் ஆளும் ஊழல் காங்கிரஸ் கட்சியால் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இந்த ஊழல்வாதிகளை ஒழிக்க மக்கள் முடிவு செய்து விட்டனர். மாநிலத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ஊழல் காங்கிரஸ் அரசை அகற்ற மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.

பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று உறுதி பூண்டிருக்கிறார்கள். எங்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் காணும் உற்சாகத்தைப் பார்க்கும்போது, ராஜஸ்தான் மக்கள் பா.ஜ.க.வை நோக்கித் தங்களது மனதை திருப்பி இருப்பதை தெளிவாகக் காட்டுகிறது. ஊழல், விவசாயக் கடன் தள்ளுபடி, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என காங்கிரஸ் அரசால் ராஜஸ்தான் மக்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன்.

காங்கிரஸ் ஆட்சியின்போது 19,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்கள் ஏலம் விடப்பட்டது. ‘சிவப்பு டைரி’ குறித்த காங்கிரஸ் தலைவர்களின் அறிக்கைகள் அவர்களின் அவநம்பிக்கையை காட்டுகிறது. மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பெரும் உற்சாகமான சூழல் நிலவுகிறது. வரும் தேர்தலில் கோட்டா மாவடத்தில் உள்ள 17 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும்” என்றார்.

Tags: RajasthanJ.P.Nadda
ShareTweetSendShare
Previous Post

சென்னிமலை விவகாரம்! கிறிஸ்துவ முன்னணி தலைவர் ஜோசப் கைது!

Next Post

ஜெகத்ரட்சகன், மது ஆலை தொடர்பான கணக்குகளில் ரூ.500 கோடிவரி ஏய்ப்பு! – வருமானவரித்துறை.

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies