ஊழல் காங்கிரஸால் ஏமாற்றப்பட்டதாக மக்கள் உணர்கிறார்கள்: ஜெ.பி.நட்டா!
Aug 8, 2026, 01:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல் காங்கிரஸால் ஏமாற்றப்பட்டதாக மக்கள் உணர்கிறார்கள்: ஜெ.பி.நட்டா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 18, 2023, 08:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஊழலில் திளைத்துள்ள காங்கிரஸ் அரசால் ஏமாற்றப்பட்டதாக ராஜஸ்தான் மக்கள் உணர்கிறார்கள். ஆகவே, மாநிலத்தில் பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்துக்குச் சென்றிருக்கும் பா.ஜ.க. தேசியத் தலைவர் நட்டா, பூண்டி மற்றும் ஜலவர் பகுதிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த கோட்டாவுக்கு வந்தார். கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த நட்டா, “ராஜஸ்தானில் தினமும் பெண்களுக்கு எதிராக 17 பலாத்கார சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

15,000-க்கும் மேற்பட்ட பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. குற்றச் சம்பவங்கள் தரவுப்படி, ராஜஸ்தான் மாநிலம் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகம் நடக்கும் இடத்தில் முதலிடத்தில் இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், விவசாயிகள், இளைஞர்களுக்கு எதிரான துரோகங்கள் அதிகரித்து வருகின்றன.

மேலும், ராஜஸ்தான் மக்கள் ஆளும் ஊழல் காங்கிரஸ் கட்சியால் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இந்த ஊழல்வாதிகளை ஒழிக்க மக்கள் முடிவு செய்து விட்டனர். மாநிலத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ஊழல் காங்கிரஸ் அரசை அகற்ற மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.

பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று உறுதி பூண்டிருக்கிறார்கள். எங்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் காணும் உற்சாகத்தைப் பார்க்கும்போது, ராஜஸ்தான் மக்கள் பா.ஜ.க.வை நோக்கித் தங்களது மனதை திருப்பி இருப்பதை தெளிவாகக் காட்டுகிறது. ஊழல், விவசாயக் கடன் தள்ளுபடி, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என காங்கிரஸ் அரசால் ராஜஸ்தான் மக்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன்.

காங்கிரஸ் ஆட்சியின்போது 19,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்கள் ஏலம் விடப்பட்டது. ‘சிவப்பு டைரி’ குறித்த காங்கிரஸ் தலைவர்களின் அறிக்கைகள் அவர்களின் அவநம்பிக்கையை காட்டுகிறது. மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பெரும் உற்சாகமான சூழல் நிலவுகிறது. வரும் தேர்தலில் கோட்டா மாவடத்தில் உள்ள 17 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும்” என்றார்.

Tags: RajasthanJ.P.Nadda
Share
Tweet
SendShare
Previous Post

சென்னிமலை விவகாரம்! கிறிஸ்துவ முன்னணி தலைவர் ஜோசப் கைது!

Next Post

ஜெகத்ரட்சகன், மது ஆலை தொடர்பான கணக்குகளில் ரூ.500 கோடிவரி ஏய்ப்பு! – வருமானவரித்துறை.

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies