திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழகத்தில் மதுவிலக்கு தொடர்பாக பாமக உறுப்பினர் கணேஷ்குமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விக்னேஷ், தவெக ஆட்சியில் மூடப்பட்டுள்ள 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆன்லைனில் ஆர்டர் செய்தால் மதுபானம் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் என்பது தவறான தகவல் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் அருண்ராஜ், டாஸ்மாக் ஊழல் தொடர்பாக ஆதாரங்கள் உள்ளதாகவும், ஊழலுக்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை வழங்கியுள்ளதாகவும், அதனை யாராலும் அழிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
இந்த விவாதத்தின்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துவதாக தெரிவித்தார்.
















