அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தான் தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்ததாக திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் கூறியதால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது,
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ கார்த்திகேயன், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பெயரைக் குறிப்பிட்டு, தானும் அவரும் நண்பர்கள் என பேசினார். அப்போது குறுக்கிட்ட துணை சபாநாயகர் ரவிசங்கர், பெயரை குறிப்பிடாமல் அமைச்சர் என்று மட்டும் குறிப்பிட்டு பேசுமாறு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய கார்த்திகேயன், தங்களுக்கு இடையிலான நட்பை பேரவைத்தலைவர் பிரிக்க வேண்டாம் என்றும், ஆதவ் அர்ஜுனா திமுகவில் இருந்த போது தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்கி கொடுத்ததாகவும் கூறினார். இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
அப்போது பேசிய அமைச்சர் ஆனந்த், அமைதியாக அமர்ந்திருக்கும் பொதுப்பணித்துறை அமைச்சரை எதற்காக கோர்த்துவிடுகிறீர்கள்? எனக் கூறியதால் அவையில் மேலும் சிரிப்பலை ஏற்பட்டது.
















