டாஸ்மாக் மதுபானக் கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் மதுபான கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதாகக்கூறி தொடரப்பட்ட வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
டாஸ்மாக்கில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு அளிக்கப்படும் புகார்கள் மீது உடனடியாக காவல்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் காவலர்களை பணியமர்த்த உத்தரவிட்ட நீதிபதி, மனுதாரர் அளித்த புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்டார்.
















