12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதர் கைத்தறி நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
கிராமப்புற நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கைத்தறி ஆடைகளை வாங்கி பரிசளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விடுத்திருந்த அழைப்பைத் தொடர்ந்து, சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் பாஜக சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், மாநில துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதர் கைத்தறி ஆடைகளை வாங்கி, பாஜக நெசவாளர் பிரிவு மாநில நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கினார். மேலும், நெசவாளர்களை ஊக்குவித்து, உள்நாட்டு கைத்தறி பொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
















