முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்புவதாக, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இதுதொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், முதல்வர் குறித்து தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அவதூறாகப் பேசியிருந்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அப்போது பேசிய திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், சபாநாயகரை போல் பண்பாளராக இருக்க வேண்டும் என்பது தான் தனது விருப்பம்.. ஆனால், சில நேரங்களில் தூத்துக்குடி மண்ணுக்கு இருக்கும் வேகத்தால் அப்படி பேசிவிட்டதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், தவறு எங்கே நடந்தாலும் அதனை கட்சித் தலைமை கண்டிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அவை உரிமைக்குழு தற்போது இல்லாத நிலையில், அது அமைக்கப்பட்ட பிறகு உரிய விளக்கம் கேட்கப்பட்டு, இந்த பிரச்சனையை அவை உரிமைக்குழுவுக்கு அனுப்புவதாக தெரிவித்தார்.
















