பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை, வரும் 21-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம், முறைகேடாக பதிவு செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீசார் கொடைக்கானல் அருகே கைது செய்தனர்.
விசாரணையின்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை நேரில் சந்தித்து உடல்நிலையை ஆய்வு செய்த மாஜிஸ்திரேட் பாக்கியராஜ், வரும் 21-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கவும், உடல்நலம் தேறும் வரை மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறவும் உத்தரவிட்டார். அதனடிப்படையில், மருத்துவமனையில் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே தலைமறைவாக இருந்த ஜெயபிரகாஷ் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார்.
















