பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகப் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் மக்கா நகரில் கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தத்தின்படி, இந்த மூன்று நாடுகளில் எவை மீதாவது நடத்தப்படும் எந்தவொரு ஆயுதமேந்திய தாக்குதலும், தங்களுக்கு எதிரான தாக்குதலாகவே கருதப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
சவுதி இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் ரெசெப் தையப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் நேரில் சந்தித்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
















