பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜந்தர் மந்தர் போராட்டம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசி பியூஸ் மானுஷ் வீடியோ வெளியிட்டிருந்தார். இதற்கு எதிராக மதுரை பாஜக மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் தங்கதுரை சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் பொது அமைதியைக் குலைக்கும் வகையில் பேசுவது, மோதலை தூண்டுவது, வதந்தி பரப்புவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பேசி வரும் பியூஸ் மானுஷை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் விலியுறுத்த்தியுள்ளது.
















