எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக விவாதங்கள் குறைந்திருந்தாலும், அவையின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளார்களிடம் பேசிய அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காலை முதல் நள்ளிரவு வரை நாடாளுமன்றத்திலேயே தங்கி பணிகளை கவனித்து வருவதாகவும், எனவே, எதிர்க்கட்சிகள் இதுகுறித்து எழுப்பும் கோரிக்கைகள் வெறும் அரசியல் நாடகம் எனவும் குறிப்பிட்டார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றும் போது, எதிர்க்கட்சிகள் அமைதியாக இருந்து அதைக் கேட்க வேண்டும் எனவும் அதைவிட்டுவிட்டு அவர்கள் வெளிநடப்புச் செய்தால், பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தார்.
















