சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் போது அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடிந்து கொண்டார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட தினத்தை நினைவு கூர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அப்போது மாநிலங்களவையில் பங்கேற்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் சில நிமிடங்கள் கூட உங்களால் அமைதி காக்க முடியாதா எனவும் என்ன மாதிரியான காங்கிரஸ் கட்சியினர் நீங்கள் என்றும் கடும் கோபம் தெரிவித்தார். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
















