"சூப்பர் உமன்": கேரள பெண்களுக்கு குவியும் பாராட்டு!
Mar 15, 2026, 07:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“சூப்பர் உமன்”: கேரள பெண்களுக்கு குவியும் பாராட்டு!

இஸ்ரேல் போரில் வீரதீர செயல் புரிந்தவர்கள்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 19, 2023, 01:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் போரில் வயதான தம்பதியை காப்பாற்றிய கேரளாவைச் சேர்ந்த 2 பெண்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  மேலும், இவர்களின் துணிச்சலை குறிப்பிட்டு “சூப்பர் உமன்” என்று இஸ்ரேல் தூதரகம் பாராட்டுத் தெரிவித்திருக்கிறது.

இஸ்ரேல்-காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையேயான போர் 13-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இப்போரில் இஸ்ரேல் தரப்பில் 1,400 பேரும், காஸா தரப்பில் 3,000 பேரும் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், இப்போரில் சிக்கி செய்வதறியாது திகைத்திருந்த வயதான தம்பதியை, 2 பெண்கள் காப்பாற்றிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கேரளாவைச் சேர்ந்த சபீதா, மீரா மோகனன் ஆகியோர், இஸ்ரேலில் உள்ள நோயால் பாதிக்கப்பட்ட வயதான தம்பதியை பராமரிக்கும் பணிக்காக, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சென்றனர். இருவரும் வயதான தம்பதியை பராமரித்து வந்த நிலையில், கடந்த 7-ம் தேதி திடீரென இஸ்ரேல் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

அப்போது, மேற்கண்ட இருவரும் வீட்டின் அனைத்துக் கதவுகளையும் பூட்டிவிட்டு, வயதான தம்பதியை அழைத்துக் கொண்டு, பாதாள அறைக்குள் பதுங்கிக் கொண்டனர். இந்த சூழலில், ஹமாஸ் தீவிரவாதிகள் வீட்டிற்குள் புகுந்து அனைத்துப் பொருட்களையும் சூறையாடினர். பாதாள அறையின் கதவையும் திறக்க முயன்றனர்.

ஆனாலும், திறக்க முடியாத அளவுக்கு 2 பெண்களும் சேர்ந்த, சுமார் 4 மணி நேரமாக கதவின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு தாங்கள் தப்பித்ததோடு, வயதான தம்பதியையும் காப்பாற்றி இருக்கின்றனர். இதையறிந்த இங்குள்ள இஸ்ரேல் தூதரகம் 2 கேரளப் பெண்களின் துணிச்சலை குறிப்பிட்டு சூப்பர் உமன் என்று பாராட்டி இருக்கிறது.

மேலும், தாக்குதலில் இருந்து தப்பிய அனுபவம் குறித்து சபீதா பேசிய வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவில் பேசும் சபீதா, “கடந்த 7-ம் தேதி காலை 6:30 மணிக்கு போர் தொடங்குவதற்கான அபாயச் சங்கு ஒலிக்கப்பட்டது. உடனே, வீட்டிலுள்ள அனைத்துக் கதவுகளையும் பூட்டிவிட்டு, நாங்கள் 4 பேரும் பாதுகாப்பான அறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டோம்.

அடுத்த சில நிமிடங்களில் வீட்டிற்குள் நுழைந்த தீவிரவாதிகள், தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டனர். அந்த சத்தத்தைக் கேட்டு பதற்றத்திலும், பயத்திலும் செய்வதறியாது நாங்கள் அதிர்ச்சியில் உறைந்தோம். இதனிடையே, பாதுகாப்பு அறையைத் திறக்கச் சொல்லி தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், தொடர்ந்து துப்பாக்கியாலும் சுட்டனர்.

ஆனாலும், நானும், மீராவும் கதவை வெளியில் இருந்து திறக்க முடியாதபடி, கைப்பிடியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டோம். சுமார் நான்கரை மணி நேரத்துக்கும் மேலாக நாங்கள் அப்படியே நின்றிருந்தோம். மதியம் 1 மணியளவில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டோம்.

வெளியே வந்து பார்த்தபோது, வீட்டில் ஒரு பொருளும் மிஞ்சவில்லை. எங்கள் இருவரின் பாஸ்போர்ட் உட்பட முக்கிய ஆவணங்கள் இருந்த பைகளையும் தீவிரவாதிகள் எடுத்துச் சென்று விட்டனர். இப்படியொரு கொடூர அனுபவத்தை இதுவரை நாங்கள் அனுபவித்ததே இல்லை” என்று கூறியிருக்கிறார்.

Tags: IsraelKerala ladiessuper woman
ShareTweetSendShare
Previous Post

டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு! 

Next Post

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies