"சூப்பர் உமன்": கேரள பெண்களுக்கு குவியும் பாராட்டு!
Jul 27, 2025, 09:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“சூப்பர் உமன்”: கேரள பெண்களுக்கு குவியும் பாராட்டு!

இஸ்ரேல் போரில் வீரதீர செயல் புரிந்தவர்கள்!

Web Desk by Web Desk
Oct 19, 2023, 01:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் போரில் வயதான தம்பதியை காப்பாற்றிய கேரளாவைச் சேர்ந்த 2 பெண்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  மேலும், இவர்களின் துணிச்சலை குறிப்பிட்டு “சூப்பர் உமன்” என்று இஸ்ரேல் தூதரகம் பாராட்டுத் தெரிவித்திருக்கிறது.

இஸ்ரேல்-காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையேயான போர் 13-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இப்போரில் இஸ்ரேல் தரப்பில் 1,400 பேரும், காஸா தரப்பில் 3,000 பேரும் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், இப்போரில் சிக்கி செய்வதறியாது திகைத்திருந்த வயதான தம்பதியை, 2 பெண்கள் காப்பாற்றிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கேரளாவைச் சேர்ந்த சபீதா, மீரா மோகனன் ஆகியோர், இஸ்ரேலில் உள்ள நோயால் பாதிக்கப்பட்ட வயதான தம்பதியை பராமரிக்கும் பணிக்காக, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சென்றனர். இருவரும் வயதான தம்பதியை பராமரித்து வந்த நிலையில், கடந்த 7-ம் தேதி திடீரென இஸ்ரேல் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

அப்போது, மேற்கண்ட இருவரும் வீட்டின் அனைத்துக் கதவுகளையும் பூட்டிவிட்டு, வயதான தம்பதியை அழைத்துக் கொண்டு, பாதாள அறைக்குள் பதுங்கிக் கொண்டனர். இந்த சூழலில், ஹமாஸ் தீவிரவாதிகள் வீட்டிற்குள் புகுந்து அனைத்துப் பொருட்களையும் சூறையாடினர். பாதாள அறையின் கதவையும் திறக்க முயன்றனர்.

ஆனாலும், திறக்க முடியாத அளவுக்கு 2 பெண்களும் சேர்ந்த, சுமார் 4 மணி நேரமாக கதவின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு தாங்கள் தப்பித்ததோடு, வயதான தம்பதியையும் காப்பாற்றி இருக்கின்றனர். இதையறிந்த இங்குள்ள இஸ்ரேல் தூதரகம் 2 கேரளப் பெண்களின் துணிச்சலை குறிப்பிட்டு சூப்பர் உமன் என்று பாராட்டி இருக்கிறது.

மேலும், தாக்குதலில் இருந்து தப்பிய அனுபவம் குறித்து சபீதா பேசிய வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவில் பேசும் சபீதா, “கடந்த 7-ம் தேதி காலை 6:30 மணிக்கு போர் தொடங்குவதற்கான அபாயச் சங்கு ஒலிக்கப்பட்டது. உடனே, வீட்டிலுள்ள அனைத்துக் கதவுகளையும் பூட்டிவிட்டு, நாங்கள் 4 பேரும் பாதுகாப்பான அறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டோம்.

அடுத்த சில நிமிடங்களில் வீட்டிற்குள் நுழைந்த தீவிரவாதிகள், தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டனர். அந்த சத்தத்தைக் கேட்டு பதற்றத்திலும், பயத்திலும் செய்வதறியாது நாங்கள் அதிர்ச்சியில் உறைந்தோம். இதனிடையே, பாதுகாப்பு அறையைத் திறக்கச் சொல்லி தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், தொடர்ந்து துப்பாக்கியாலும் சுட்டனர்.

ஆனாலும், நானும், மீராவும் கதவை வெளியில் இருந்து திறக்க முடியாதபடி, கைப்பிடியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டோம். சுமார் நான்கரை மணி நேரத்துக்கும் மேலாக நாங்கள் அப்படியே நின்றிருந்தோம். மதியம் 1 மணியளவில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டோம்.

வெளியே வந்து பார்த்தபோது, வீட்டில் ஒரு பொருளும் மிஞ்சவில்லை. எங்கள் இருவரின் பாஸ்போர்ட் உட்பட முக்கிய ஆவணங்கள் இருந்த பைகளையும் தீவிரவாதிகள் எடுத்துச் சென்று விட்டனர். இப்படியொரு கொடூர அனுபவத்தை இதுவரை நாங்கள் அனுபவித்ததே இல்லை” என்று கூறியிருக்கிறார்.

Tags: IsraelKerala ladiessuper woman
ShareTweetSendShare
Previous Post

டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு! 

Next Post

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

Related News

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies