"சூப்பர் உமன்": கேரள பெண்களுக்கு குவியும் பாராட்டு!
Nov 15, 2025, 01:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“சூப்பர் உமன்”: கேரள பெண்களுக்கு குவியும் பாராட்டு!

இஸ்ரேல் போரில் வீரதீர செயல் புரிந்தவர்கள்!

Web Desk by Web Desk
Oct 19, 2023, 01:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் போரில் வயதான தம்பதியை காப்பாற்றிய கேரளாவைச் சேர்ந்த 2 பெண்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  மேலும், இவர்களின் துணிச்சலை குறிப்பிட்டு “சூப்பர் உமன்” என்று இஸ்ரேல் தூதரகம் பாராட்டுத் தெரிவித்திருக்கிறது.

இஸ்ரேல்-காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையேயான போர் 13-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இப்போரில் இஸ்ரேல் தரப்பில் 1,400 பேரும், காஸா தரப்பில் 3,000 பேரும் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், இப்போரில் சிக்கி செய்வதறியாது திகைத்திருந்த வயதான தம்பதியை, 2 பெண்கள் காப்பாற்றிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கேரளாவைச் சேர்ந்த சபீதா, மீரா மோகனன் ஆகியோர், இஸ்ரேலில் உள்ள நோயால் பாதிக்கப்பட்ட வயதான தம்பதியை பராமரிக்கும் பணிக்காக, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சென்றனர். இருவரும் வயதான தம்பதியை பராமரித்து வந்த நிலையில், கடந்த 7-ம் தேதி திடீரென இஸ்ரேல் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

அப்போது, மேற்கண்ட இருவரும் வீட்டின் அனைத்துக் கதவுகளையும் பூட்டிவிட்டு, வயதான தம்பதியை அழைத்துக் கொண்டு, பாதாள அறைக்குள் பதுங்கிக் கொண்டனர். இந்த சூழலில், ஹமாஸ் தீவிரவாதிகள் வீட்டிற்குள் புகுந்து அனைத்துப் பொருட்களையும் சூறையாடினர். பாதாள அறையின் கதவையும் திறக்க முயன்றனர்.

ஆனாலும், திறக்க முடியாத அளவுக்கு 2 பெண்களும் சேர்ந்த, சுமார் 4 மணி நேரமாக கதவின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு தாங்கள் தப்பித்ததோடு, வயதான தம்பதியையும் காப்பாற்றி இருக்கின்றனர். இதையறிந்த இங்குள்ள இஸ்ரேல் தூதரகம் 2 கேரளப் பெண்களின் துணிச்சலை குறிப்பிட்டு சூப்பர் உமன் என்று பாராட்டி இருக்கிறது.

மேலும், தாக்குதலில் இருந்து தப்பிய அனுபவம் குறித்து சபீதா பேசிய வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவில் பேசும் சபீதா, “கடந்த 7-ம் தேதி காலை 6:30 மணிக்கு போர் தொடங்குவதற்கான அபாயச் சங்கு ஒலிக்கப்பட்டது. உடனே, வீட்டிலுள்ள அனைத்துக் கதவுகளையும் பூட்டிவிட்டு, நாங்கள் 4 பேரும் பாதுகாப்பான அறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டோம்.

அடுத்த சில நிமிடங்களில் வீட்டிற்குள் நுழைந்த தீவிரவாதிகள், தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டனர். அந்த சத்தத்தைக் கேட்டு பதற்றத்திலும், பயத்திலும் செய்வதறியாது நாங்கள் அதிர்ச்சியில் உறைந்தோம். இதனிடையே, பாதுகாப்பு அறையைத் திறக்கச் சொல்லி தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், தொடர்ந்து துப்பாக்கியாலும் சுட்டனர்.

ஆனாலும், நானும், மீராவும் கதவை வெளியில் இருந்து திறக்க முடியாதபடி, கைப்பிடியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டோம். சுமார் நான்கரை மணி நேரத்துக்கும் மேலாக நாங்கள் அப்படியே நின்றிருந்தோம். மதியம் 1 மணியளவில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டோம்.

வெளியே வந்து பார்த்தபோது, வீட்டில் ஒரு பொருளும் மிஞ்சவில்லை. எங்கள் இருவரின் பாஸ்போர்ட் உட்பட முக்கிய ஆவணங்கள் இருந்த பைகளையும் தீவிரவாதிகள் எடுத்துச் சென்று விட்டனர். இப்படியொரு கொடூர அனுபவத்தை இதுவரை நாங்கள் அனுபவித்ததே இல்லை” என்று கூறியிருக்கிறார்.

Tags: IsraelKerala ladiessuper woman
ShareTweetSendShare
Previous Post

டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு! 

Next Post

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

Related News

ஷென்சோ – 21 விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்!

தாய்லாந்தில் மதிய நேர மதுபான விற்பனைக்கான தடைக்கு விலக்கு!

மகனை ஆணவக் கொலை செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

கடலூர் : சுடுகாட்டிற்கு சாலை வசதி கோரி சடலத்தை சாலையில் வைத்து மறியல்!

சென்னை : கான்கிரீட் மூடியை அமைத்து கால்வாய் கட்டியதாக கணக்கு!

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையில் திமுக குழப்பத்தை ஏற்படுத்துகிறது – பாஜக பொருளாதார பிரிவின் மாநில அமைப்பாளர் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

திண்டுக்கல் : அமைச்சர் வருகையை ஒட்டி கழிவுநீர் வாய்க்காலை துணியை வைத்து மறைத்த அவலம்!

கூடங்குளம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து : 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

இலங்கை : முதலையிடம் சிக்கிய குட்டியைக் காப்பாற்ற ஆற்றுக்குள் இறங்கி போராடிய தாய் யானை!

சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்த நாள் – தலைவர்கள் மரியாதை!

காஞ்சிபுரம் : கவுன்சிலர்கள் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் பங்கேற்க அனுமதி மறுப்பு!

வைகை அணையின் நீர்மட்டம் குறைவு- விவசாயிகள் வேதனை!

நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி அமைப்பினர் வேல் பூஜை!

மடிக்கணினி திருடியவரை தேடிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நடிகை!

ராமநாதபுரம் : சர்வர் கோளாறு – பயிர் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies