போலி பிறப்பு சான்றிதழ் வழக்கு: சமாஜ்வாதி தலைவருக்கு 7 ஆண்டு சிறை!
Mar 15, 2026, 06:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலி பிறப்பு சான்றிதழ் வழக்கு: சமாஜ்வாதி தலைவருக்கு 7 ஆண்டு சிறை!

Murugesan M by Murugesan M
Oct 19, 2023, 09:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போலி பிறப்புச் சான்றிதழ் வழக்கில், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசம்கான், அவரது மனைவி தசீன் பாத்திமா மற்றும் மகன் அப்துல்லா அசம் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசம்கான், தன்னுடைய மகன் அப்துல்லா அசம்-க்கு போலியாக பிறப்பு சான்றிதழ் பெற்றதாக புகார் எழுந்தது. இதற்கு அசம்கான் மனைவி தசீம் பாத்திமா உதவியதாகவும் புகார் எழுந்தது.

இதுகுறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஆகாஷ் சக்சேனா ராம்பூரின் கஞ்ச் காவல் நிலையத் தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை ராம்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், “இராம்பூர் நகராட்சி அளித்த பிறப்புச் சான்றிதழில், அப்துல்லா அசமின் பிறந்த தேதி, 1993 ஜனவரி 1 எனவும், லக்னோ நகராட்சி அளித்த பிறப்பு சான்றிதழில் 1990 செப்டம்பர் 30 எனவும் உள்ளது. அசம்கான், தசீம் பாத்திமா அளித்த உறுதிமொழி சான்றிதழ் அடிப்படையில் இராம்பூரில் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் அசம்கான், அவரது மனைவி தசீம் பாத்திமா, மகன் அப்துல்லா அசம் ஆகிய மூவரும் குற்றவாளிகள் எனவும், அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாகவும் நீதிபதி ஷோபித் பன்சால் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதை அடுத்து மூவரும் நீதிமன்றத்தில் இருந்து சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

உ.பி.யில் அசம் கான் மீது நில அபகரிப்பு, மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது மனைவி, மகன் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபரில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பின் அடிப்படையில் அசம் கானும், கடந்த பிப்ரவரியில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பின் அடிப்படையில் அப்துல்லா அசமும் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: arrestedSenior Samajwadi Party leader Azam Khan
ShareTweetSendShare
Previous Post

மத்திய புலனாய்வு அமைப்புக்கு (IB) தகவல் அறியும் சட்டத்தில் இருந்து விலக்கு!

Next Post

பங்காரு அடிகளார் மறைவு! – அமித் ஷா, அண்ணாமலை இரங்கல்.

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies