போலி பிறப்பு சான்றிதழ் வழக்கு: சமாஜ்வாதி தலைவருக்கு 7 ஆண்டு சிறை!
Oct 3, 2025, 09:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலி பிறப்பு சான்றிதழ் வழக்கு: சமாஜ்வாதி தலைவருக்கு 7 ஆண்டு சிறை!

Web Desk by Web Desk
Oct 19, 2023, 09:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போலி பிறப்புச் சான்றிதழ் வழக்கில், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசம்கான், அவரது மனைவி தசீன் பாத்திமா மற்றும் மகன் அப்துல்லா அசம் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசம்கான், தன்னுடைய மகன் அப்துல்லா அசம்-க்கு போலியாக பிறப்பு சான்றிதழ் பெற்றதாக புகார் எழுந்தது. இதற்கு அசம்கான் மனைவி தசீம் பாத்திமா உதவியதாகவும் புகார் எழுந்தது.

இதுகுறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஆகாஷ் சக்சேனா ராம்பூரின் கஞ்ச் காவல் நிலையத் தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை ராம்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், “இராம்பூர் நகராட்சி அளித்த பிறப்புச் சான்றிதழில், அப்துல்லா அசமின் பிறந்த தேதி, 1993 ஜனவரி 1 எனவும், லக்னோ நகராட்சி அளித்த பிறப்பு சான்றிதழில் 1990 செப்டம்பர் 30 எனவும் உள்ளது. அசம்கான், தசீம் பாத்திமா அளித்த உறுதிமொழி சான்றிதழ் அடிப்படையில் இராம்பூரில் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் அசம்கான், அவரது மனைவி தசீம் பாத்திமா, மகன் அப்துல்லா அசம் ஆகிய மூவரும் குற்றவாளிகள் எனவும், அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாகவும் நீதிபதி ஷோபித் பன்சால் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதை அடுத்து மூவரும் நீதிமன்றத்தில் இருந்து சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

உ.பி.யில் அசம் கான் மீது நில அபகரிப்பு, மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது மனைவி, மகன் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபரில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பின் அடிப்படையில் அசம் கானும், கடந்த பிப்ரவரியில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பின் அடிப்படையில் அப்துல்லா அசமும் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: arrestedSenior Samajwadi Party leader Azam Khan
ShareTweetSendShare
Previous Post

மத்திய புலனாய்வு அமைப்புக்கு (IB) தகவல் அறியும் சட்டத்தில் இருந்து விலக்கு!

Next Post

பங்காரு அடிகளார் மறைவு! – அமித் ஷா, அண்ணாமலை இரங்கல்.

Related News

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

Load More

அண்மைச் செய்திகள்

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies