போலி பிறப்பு சான்றிதழ் வழக்கு: சமாஜ்வாதி தலைவருக்கு 7 ஆண்டு சிறை!
Jul 1, 2025, 10:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலி பிறப்பு சான்றிதழ் வழக்கு: சமாஜ்வாதி தலைவருக்கு 7 ஆண்டு சிறை!

Web Desk by Web Desk
Oct 19, 2023, 09:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போலி பிறப்புச் சான்றிதழ் வழக்கில், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசம்கான், அவரது மனைவி தசீன் பாத்திமா மற்றும் மகன் அப்துல்லா அசம் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசம்கான், தன்னுடைய மகன் அப்துல்லா அசம்-க்கு போலியாக பிறப்பு சான்றிதழ் பெற்றதாக புகார் எழுந்தது. இதற்கு அசம்கான் மனைவி தசீம் பாத்திமா உதவியதாகவும் புகார் எழுந்தது.

இதுகுறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஆகாஷ் சக்சேனா ராம்பூரின் கஞ்ச் காவல் நிலையத் தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை ராம்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், “இராம்பூர் நகராட்சி அளித்த பிறப்புச் சான்றிதழில், அப்துல்லா அசமின் பிறந்த தேதி, 1993 ஜனவரி 1 எனவும், லக்னோ நகராட்சி அளித்த பிறப்பு சான்றிதழில் 1990 செப்டம்பர் 30 எனவும் உள்ளது. அசம்கான், தசீம் பாத்திமா அளித்த உறுதிமொழி சான்றிதழ் அடிப்படையில் இராம்பூரில் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் அசம்கான், அவரது மனைவி தசீம் பாத்திமா, மகன் அப்துல்லா அசம் ஆகிய மூவரும் குற்றவாளிகள் எனவும், அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாகவும் நீதிபதி ஷோபித் பன்சால் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதை அடுத்து மூவரும் நீதிமன்றத்தில் இருந்து சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

உ.பி.யில் அசம் கான் மீது நில அபகரிப்பு, மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது மனைவி, மகன் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபரில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பின் அடிப்படையில் அசம் கானும், கடந்த பிப்ரவரியில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பின் அடிப்படையில் அப்துல்லா அசமும் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: arrestedSenior Samajwadi Party leader Azam Khan
ShareTweetSendShare
Previous Post

மத்திய புலனாய்வு அமைப்புக்கு (IB) தகவல் அறியும் சட்டத்தில் இருந்து விலக்கு!

Next Post

பங்காரு அடிகளார் மறைவு! – அமித் ஷா, அண்ணாமலை இரங்கல்.

Related News

டெலிவரி செயலிகள் மூலம் வரும் ஆர்டர்களுக்கு உணவு வழங்கப்படாது – நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

திருப்பூர் மாநகராட்சி ரேஷன் அட்டைதாரர்களுக்கு முறையாக உணவு பொருட்கள் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு!

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதுச்சேரி பாஜக தலைவராக வி.பி. ராமலிங்கம் பதவியேற்பு!

திருப்பூர் இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கு – மேலும் 3 பேர் கைது!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளித்து உயிரிழந்த எதிரொலி – தீவிர சோதனைக்கு பிறகு குறைதீர் கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டட பொதுமக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூரில் ரூ. 75,000 லஞ்சம் வாங்கிய நில எடுப்பு வட்டாட்சியர் கைது

சேலத்தில் கால்வாய் கட்ட பணம் தர மறுத்த வெள்ளிப் பட்டறை உரிமையாளரை தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர் கைது!

சிங்கம்புணரி அருகே குவாரி மண் சரிவில் 6 பேர் பலியான வழக்கு – குவாரி உரிமையாளர், மேலாளருக்கு முன்ஜாமின்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா – யாகசாலை இன்று தொடக்கம்!

எட்டயபுரத்தில் மகாகவி பாரதி இல்லத்தை சீரமைக்க வலியுறுத்தல் – பாஜக ஆர்பாட்டம்!

செயல்படாத தமிழக அரசு – மத்திய அரசு எல்.முருகன் குற்றச்சாட்டு!

குற்ற வழக்குகளை முடிக்க ரூ. 2 லட்சம் லஞ்சம் – ஆய்வாளர் மற்றும் ஏட்டுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை!

திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா – சிறப்பு ரயில் இயக்கம்!

கப்பல் பயணிகளின் எண்ணிக்கை 2029-ம் ஆண்டுக்குள் 15 லட்சமாக உயரும் – அமைச்சர் சர்பானந்த சோனோவால்

ஜிஎஸ்டி ஒட்டுமொத்த வசூல் 5 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies