கூடுதல் கட்டணம்: சிக்கிய 18 ஆம்னி பேருந்துகள்!
Oct 25, 2025, 07:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூடுதல் கட்டணம்: சிக்கிய 18 ஆம்னி பேருந்துகள்!

Web Desk by Web Desk
Oct 21, 2023, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாநகரில் கூடுதல் கட்டணம் வசூல் மற்றும் சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்டு வந்த 18 ஆம்னி பேருந்துகளை மத்திய வட்டாரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாகச் சென்னையிலிருந்து, கோவை, திருச்சி, சேலம், பெங்களூரு மற்றும் தென் மாவட்டங்களுக்கு ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், விடுமுறையையொட்டி, தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. இது குறித்து பொதுமக்கள் தொடர் புகார் அளித்தும் தமிழக போக்குவரத்துறை கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில், பொது மக்கள் புகார் எதிரொலியாக, மத்திய வட்டாரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கடந்த மூன்று நாட்களாகக் கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

இதில், கூடுதல் கட்டணம் வசூல் செய்தது மற்றும் சாலை வரி கட்டாமல் இயக்கப்பட்டது உள்ளிட்ட காரணங்களுக்காக 18 ஆம்னி பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

தற்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் சம்பந்தப்பட்ட தனியார் பேருந்துகளை உடனே பறிமுதல் செய்ய வேண்டும் என போக்குவரத்துறை அதிகாரிகளுக்கு பயணிகளும், பொது மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags: navarathiri festivelprivate bus
ShareTweetSendShare
Previous Post

கரூர் மணல் குவாரிகளில் E.D. மீண்டும் ரெய்டு – என்ன நடக்கிறது?

Next Post

புதிய திரைப்படங்களால் கேள்விக்குறியாகும் பொது அமைதி – என்னதான் தீர்வு?

Related News

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies